search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WTC Final 23"

    • 2-வது இன்னிங்சில் நாதன் லயன் 4 விக்கெட் வீழ்த்தினார்
    • இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் ரன்கள் குவிக்க தவறினர்

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. அஸ்வினை தேர்வு செய்யாததும், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

    இதனைத் தொடர்ந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வர, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தோல்வி குறித்தும், அஸ்வினை நீக்கியது குறித்தும் சச்சின் தெண்டுல்கர் கூறியிருப்பதாவது:-

    அஸ்வின் போன்ற திறமையான ஆஃப் ஸ்பின்னர்கள், சாதகமில்லாத ஆடுகளங்களில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவரின் திறமையை பயன்படுத்த முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    போட்டியின் முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று, பெரிய ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்களால் அது இயலவில்லை.

    திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், 'டர்னிங் ட்ராக்' எனப்படும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை மட்டுமே நம்பி இருப்பதில்லை.

    அவர்கள் காற்றின் சுழற்சியையும், பவுன்சரையும் சாமர்த்தியமாக பயன்படுத்தி வெற்றி தேடித்தருவார்கள். இந்த கருத்தை ஏற்கனவே ஆட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பாகவே நான் வெளிப்படுத்தியிருந்தேன். டாப் ஆர்டர் எட்டு பேட்ஸ்மேன்களில் 5 இடது கை பேட்ஸ்மேன்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியதை நாம் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்த நிலையில், எதிரணியில் 4 இடது கை பேட்ஸ்மேன் இருப்பது தெரிந்தும், வானிலையின் இருள்சூழ்ந்த தோற்றத்தினால் நான்காவதாக ஒரு பிரத்யேக வேகப்பந்து வீச்சாளருடன் போட்டிக்கு சென்றதாக பயிற்சியாளரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், சாதனையாளருமான ராகுல் டிராவிட் தெரிவித்திருக்கிறார்.

    ஆனால், டெஸ்ட் போட்டியின் 5 நாட்களுமே, பிரகாசமான சூரிய ஒளி வீச முதல் நாளிலேயே ஆஸ்திரேலியா 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இதன் மூலம் இந்திய வெற்றிக்கான கதவுகள் முதல் நாளே மூடப்பட்ட சூழ்நிலை உருவானது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அஸ்வின் 13 ஆட்டங்களில் 61 விக்கெட்கள் எடுத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆல்-அவுட் அனது.
    • இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சில் திணறியது.

    லண்டன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் 469 ரன்கள் குவித்து ஆல்-அவுட் அனது.

    டிராவிஸ் ஹெட் 163 ரன்னும், ஸ்டீவன் சுமித் 121 ரன்னும், அலெக்ஸ் கேரி 48 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது சமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சில் திணறியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும், சுப்மன் கில் 13 ரன்னிலும், புஜாரா, கோலி தலா 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்தியா 71 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. பின்னர் ரகானே-ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது. ஜடேஜா 48 ரன்னில் அவுட் அனார்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ரகானே 29 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி ஆஸ்திேரலியாவை விட 318 ரன்கன் பின்தங்கி உள்ளது. பாலோ-ஆனை தவிர்க்க இன்னும் 119 ரன்கள் சேர்த்தாக வேண்டும். கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன.

    தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது. இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் எழுச்சி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரகானே நிலைத்து நின்று விளையாடுவது முக்கியம். அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக ஆட வேண்டும். அதே வேளையில் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் நன்கு கணித்து பந்து வீசுகிறார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமுடன் விளையாடுவது அவசியம்.

    இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியமானது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும்.

    ×