என் மலர்

    நீங்கள் தேடியது "women complaint"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கூடுதல் வரதட்சணை கேட்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவன், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கீழக்கரை:

    கீழக்கரை தெற்கு தெரு காசீம் மரைக்காயர் மகள் ஜென்னத்துல் குர்ஜித் (வயது 23). இவர் அனைத்து மகளிர் போலீசில் ஒருபுகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனக்கும், கீழக்கரை ஹபீப் முகம்மது மகன் சேக் உமர் சாதிக் என்பவருக்கும் 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் கேட்டபடி சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன.

    திருமணம் முடிந்ததும் சேக் உமர் சாதிக் என்னை சிங்கப்பூர் அழைத்து சென்றார். பின்னர் பிரசவத்திற்காக எனது தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் யமுனா விசாரணை நடத்தி சேக்உமர் சாதிக், அவரது தாயார் ரபீசர் பேகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போர்வேல் பராமரிப்பவர்கள் குடிநீர் விநியோகிக்காததால் இது குறித்து பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
    கொண்டலாம்பட்டி

    சேலம் குகை ஆண்டிப்பட்டி வசந்தம் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 133 வீடுகள் உள்ளன. கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் போர்வேல் மூலம் எங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நாங்கள் இது குறித்து போர்வேல் பராமரிப்பவர்களிடம் கேட்டோம். அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
    ×