என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழக்கரையில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கணவன், மாமியார் மீது பெண் புகார்
Byமாலை மலர்23 Aug 2018 9:17 AM GMT (Updated: 23 Aug 2018 9:17 AM GMT)
கூடுதல் வரதட்சணை கேட்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் கணவன், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கீழக்கரை:
கீழக்கரை தெற்கு தெரு காசீம் மரைக்காயர் மகள் ஜென்னத்துல் குர்ஜித் (வயது 23). இவர் அனைத்து மகளிர் போலீசில் ஒருபுகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனக்கும், கீழக்கரை ஹபீப் முகம்மது மகன் சேக் உமர் சாதிக் என்பவருக்கும் 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் கேட்டபடி சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன.
திருமணம் முடிந்ததும் சேக் உமர் சாதிக் என்னை சிங்கப்பூர் அழைத்து சென்றார். பின்னர் பிரசவத்திற்காக எனது தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் யமுனா விசாரணை நடத்தி சேக்உமர் சாதிக், அவரது தாயார் ரபீசர் பேகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
கீழக்கரை தெற்கு தெரு காசீம் மரைக்காயர் மகள் ஜென்னத்துல் குர்ஜித் (வயது 23). இவர் அனைத்து மகளிர் போலீசில் ஒருபுகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனக்கும், கீழக்கரை ஹபீப் முகம்மது மகன் சேக் உமர் சாதிக் என்பவருக்கும் 2017ம்ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டு தரப்பில் கேட்டபடி சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன.
திருமணம் முடிந்ததும் சேக் உமர் சாதிக் என்னை சிங்கப்பூர் அழைத்து சென்றார். பின்னர் பிரசவத்திற்காக எனது தாய் வீட்டில் விட்டு சென்றார். இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது.
அதன் பிறகு என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் இருந்து வந்தார். இதுகுறித்து கேட்டபோது கூடுதலாக ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் யமுனா விசாரணை நடத்தி சேக்உமர் சாதிக், அவரது தாயார் ரபீசர் பேகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X