என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர்வேல் பராமரிப்பவர்கள் மிரட்டல்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண்கள் புகார்
Byமாலை மலர்25 July 2018 5:32 PM GMT (Updated: 25 July 2018 5:32 PM GMT)
போர்வேல் பராமரிப்பவர்கள் குடிநீர் விநியோகிக்காததால் இது குறித்து பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கொண்டலாம்பட்டி
சேலம் குகை ஆண்டிப்பட்டி வசந்தம் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 133 வீடுகள் உள்ளன. கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் போர்வேல் மூலம் எங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நாங்கள் இது குறித்து போர்வேல் பராமரிப்பவர்களிடம் கேட்டோம். அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X