search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman advocate"

    • போராட்டம் நடத்திய 2 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இவர் சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே டாஸ்மாக் கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தொடர் போராட்டங்களால் போலீசாரால் நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை மதுரை காந்தி மியூசியம் முன்பு நந்தினி தனது சகோதரி வக்கீல் நிரஞ்சனாவுடன் வந்தார். மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்திய அவர்கள் திடீரென கோஷமிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், தவறான பொருளாதார கொள்கையை கடைபி டிக்கும் மோடி அரசை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் போ ராட்டம் நடத்த அனுமதி யில்லை. எனவே போ ராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். ஆனால் நந்தினி, நிரஞ்சனா தொடர்ந்து கோஷமிட்டபடி போராடினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கானாவில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கற்பழிப்பு செய்து விட்டதாக பெண் வக்கீல் அளித்த புகாரின் பேரில் நீதிபதி கைது செய்யப்பட்டார். #Telangana #JuniorCivilJudge
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டையில் 29 வயதான பெண் வக்கீல் ஒருவரை கற்பழித்ததாக சத்திய நாராயணராவ் (28) என்ற சிவில் நீதிபதி மீது புகார் எழுந்து உள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில், நீதிபதி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு விட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.

    இந்த புகாரின்மீது போலீசார் கற்பழிப்பு தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.  #Telangana #JuniorCivilJudge 
    ×