search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife complain"

    திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), இவரது மனைவி மீனா (28). இவர்களுக்கு 4 வயதில் பெண்குழந்தை உள்ளது. திருவாரூரில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அறிவழகன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். திருப்பூருக்கு வேலைக்கு சென்ற அறிவழகன் வீட்டிற்கு வராமலும், பணமும் அனுப்பாமல் இருந்துள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த மீனா இதுகுறித்து திருப்பூரில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்த போது அறிவழகன் அங்கு திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா இதுகுறித்து அறிவழகனிடம் கேட்ட போது வரதட்சணை வாங்கிவந்தால் மட்டுமே உன்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி அறிவழகன அடித்து துன்புறுத்தினாராம்.

    இதுகுறித்து மீனா திருவாரூர் அனைத்துமகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    வியாசர்பாடி அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்ற கணவனை மீட்டு தர கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×