search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water atm"

    • மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.
    • வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன.

    கோத்தகிரி

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஒழிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா முயற்சியின் பேரில் மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.

    குறிப்பாக கோத்தகிரி பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் இந்த வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு கோத்தகிரி மார்க்கமாக பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக அளவு பயன்பட்டு வந்த இந்த வாட்டர் ஏ.டி.எம்.களில் உள்ள குடிநீர் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை.

    தண்ணீரை பாட்டில்களில் பிடிக்கும் போது சிறிய பூச்சிகள் அதனுள் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன. மேலும் கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.மின் பின் பகுதி சிறுநீர் கழிக்கும் இடமாகவே மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாட்டர் ஏ.டி.எம்.களை பார்வையிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

    நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கோஹிமா கல்லூரியில் மாணவர்கள் வசதிக்காக வாட்டர் ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WaterATM
    கோஹிமா:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இதன் தலைநகரம் கோஹிமா. இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வாட்டர் ஏடிஎம் அமைக்கப்படும் என உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி துறை மந்திரி அறிவித்தார்.

    அதன் ஒரு பகுதியாக, கோஹிமா நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று வாட்டர் ஏடிஎம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த ஏடிஎம்மில் ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும். இந்த கருவியை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஐந்து ரூபாய்க்கு 5 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஏடிஎம் வெற்றியை பொறுத்துதான் பல்வேறு இடங்களில் இதை அமைப்பது குறித்து பரீசிலிக்கப்படும் என்றார். #WaterATM
    ×