search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wardrobe"

    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
    • ருக்‌ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லியில் துவாராகாவின் ராஜபுரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகின்.

    இவர் அப்பகுதியில் உள்ள டப்ரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ருக்ஷாரை (வயது26). கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. மாயமான எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ருக்ஷா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பிளாட்டுக்குள் நுழைந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது ருக்ஷார் கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் அலமாரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

    அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்தை கத்தியால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது உடல் கதவு அருகே உள்ள அலமாரியில் அமர்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அங்கித்சிங் கூறினார்.

    இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    ருக்ஷார், குஜராத்தின் சூரத் பகுதியை பூர்வீகமாக கொண்ட விபால் டெய்லர் என்ற வாலிபருடன் கடந்த 1½ மாதங்களாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்ஷார் அவரது தந்தைக்கு போன் செய்துள்ளார்.

    அப்போது தனது நண்பரான விபால் டெய்லர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளாராம். எனவே அவர் ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விபால் டெய்லரை தேடி வருகின்றனர்.

    • நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
    • கதவணை கட்டும் பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பிலிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், பனமங்கலம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல், திருநகரி, காரைமேடு, புதுத்துறை, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுல்லைவாசலில் கடலில் கலந்து வருகிறது.

    இந்த உப்பனாறு மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது. இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது. இதனால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நபார்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கியது. ரூ. 30 கோடியே 96 லட்சத்தில் திருநகரியில் உப்பனாற்றின் குறுக்கே கதவனை கட்டும் பணிகள் தொடங்கியது.

    இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைய வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவடையாததால் கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதை தடுக்க முடியாமல் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 240 மீட்டர் நீளத்திற்கு கதவணை அமைக்கப்பட்டு வரும் நிலையில் இதில் 39 ஷட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.

    அவற்றின் 18 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மெத்தனமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள், கிராம மக்கள், விவசாயிகள் பாதிப்பு உள்ளாவது தொடர்கதையாக உள்ளது.இதனிடையே இப்பணிகளை முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பி.வி. பாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது திருநகரி உப்பனாற்றில் கதவனைக் கட்ட நிதி ஒதுக்கீடு பெற்று கடந்த 2020 ஆகஸ்டு மாதம் பணிகள் தொடங்கியது.

    ஆனால் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே வரும் மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இதில் தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அக்செப்ட் அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஜெக.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×