search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VSR Jegathees"

    • துரைகுடியிருப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பேவர் பிளாக் சாலை

    அதன்படி பரமேஸ்வரபுரம் பஞ்சாயத்து முத்தாரம்மன் கோவில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்தில் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் சாலை பணி, துரைகுடியிருப்பில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க

    தொட்டிக்கும், 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்ததோடு, விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய

    கவுன்சிலர்கள் படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அந்தோனி அருள், இந்திரா மின்னல், மணிகண்டன், ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், கஸ்தூரிரெங்க புரம் பாலன், நவ்வலடி சரவண குமார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், சிதம்பரபுரம் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய துணை செயலாளர் செழியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கல்கண்டு, கல்யாணி, சமுகை கருணை ராஜ், முருகேஷ், ரீகன், எழில் ஜோசப், முத்தையா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரமானது கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பணை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டபுளி ஆகிய கிராமங்களுக்கு நடுநிலையான இடத்தில் அமைந்துள்ளது.

    ரூ. 1.60 கோடி

    இதனால் மீன்வள மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் அலுவலகம் மீனவ கிராம மக்களுக்கு பயன்படும் வண்ணம் ராதாபுரம் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்தது.

    இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.

    அலுவலகம் இங்கு அமைவதால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அரசு அலுவலர்கள் மூலம் தெரிந்து திட்டம் கிடைக்க எளிமையாக இருக்கும். மீனவர்களின் பயிற்சி மற்றும் கூடங்கள் அமைக்க சிறப்பாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, பரிமளம், மவுளின், இசக்கிபாபு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், ராதிகா சரவணகுமார், மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ராமையா, அகஸ்டின், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஷ்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், காமில், எழில் ஜோசப், குமார், டென்னிஸ், முத்தையா, கோகுல், வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×