search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரத்தில்  மீன்வளத்துறை அலுவலகம் திறப்பு-  வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பங்கேற்பு
    X

    ராதாபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ராதாபுரத்தில் மீன்வளத்துறை அலுவலகம் திறப்பு- வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் பங்கேற்பு

    • புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரமானது கடற்கரை கிராமங்களான கூடுதாழை, கூட்டப்பணை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டபுளி ஆகிய கிராமங்களுக்கு நடுநிலையான இடத்தில் அமைந்துள்ளது.

    ரூ. 1.60 கோடி

    இதனால் மீன்வள மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் அலுவலகம் மீனவ கிராம மக்களுக்கு பயன்படும் வண்ணம் ராதாபுரம் பழைய தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்தது.

    இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார்.

    அலுவலகம் இங்கு அமைவதால் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அரசு அலுவலர்கள் மூலம் தெரிந்து திட்டம் கிடைக்க எளிமையாக இருக்கும். மீனவர்களின் பயிற்சி மற்றும் கூடங்கள் அமைக்க சிறப்பாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜதுரை, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, பரிமளம், மவுளின், இசக்கிபாபு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில மீனவரணி துணை செயலாளர் எரிக்ஜுடு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், ராதிகா சரவணகுமார், மணிகண்டன், முருகன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், ராமையா, அகஸ்டின், மாவட்ட ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஷ்டன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், காமில், எழில் ஜோசப், குமார், டென்னிஸ், முத்தையா, கோகுல், வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×