search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்
    X

    வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டிய காட்சி.

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்

    • துரைகுடியிருப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பேவர் பிளாக் சாலை

    அதன்படி பரமேஸ்வரபுரம் பஞ்சாயத்து முத்தாரம்மன் கோவில் தெருவில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல், சமூகரெங்கபுரம் பஞ்சாயத்தில் ரூ. 4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் சாலை பணி, துரைகுடியிருப்பில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க

    தொட்டிக்கும், 5 லட்சம் மதிப்பீட்டில் தலா 2 பேவர் பிளாக் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்ததோடு, விஜயாபதி பஞ்சாயத்து தோமையார்புரம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய

    கவுன்சிலர்கள் படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அந்தோனி அருள், இந்திரா மின்னல், மணிகண்டன், ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், கஸ்தூரிரெங்க புரம் பாலன், நவ்வலடி சரவண குமார், உறுமன்குளம் பொன் இசக்கி பாண்டியன், சிதம்பரபுரம் முருகன், ஒன்றிய அவைத்தலைவர் ராமையா, மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய துணை செயலாளர் செழியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கல்கண்டு, கல்யாணி, சமுகை கருணை ராஜ், முருகேஷ், ரீகன், எழில் ஜோசப், முத்தையா, முத்து மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×