search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voter name addition"

    • திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும், ஏப்ரல் மாதம் 1-ந் தேதி, ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே கொடுக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, வெளிநாடுவாழ் வாக்காளரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஏ, தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க படிவம்-6 பி, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க படிவம்-7, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை, புகைப்படத்தை திருத்தம் செய்ய படிவம்-8 விண்ணப்பிக்க வேண்டும்.பொதுமக்கள் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 1-1-2019-ந் தேதியை 18 வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்யவும் நேற்று முதல் அக்.31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி படிவம் எண் 6 வாக்காளர் பெயர் சேர்த்தல், படிவம் 7 பெயர் நீக்கம் செய்தல், படிவம் 8ஏ பிழை திருத்தல், முகவரியில் தவறு இருந்தால், வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வோர் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் வரும் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.

    எனவே அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பணிகள் குறித்த விவரங்களை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்கவும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ×