என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vayapuri Manikandan"

    • புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களுக்கு கடுகளவு நல்லது செய்துவிட்டு, முழு பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு ஊழலை அரங்கேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    மக்களின் வரிப்பணத்தில் சம்பாதித்த ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் மின்துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இதனை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால் மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அனைத்து முயற்சி களையும் முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

    தொழிலாளர்களின் எண்ணத்திற்கு விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சொல்லி க்கொண்டே, தனியார்மய வேலைகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு உள்ளதால் தனியார்மய டெண்டர் திறக்கப்படாமல் உள்ளது.

    விரைவில் இதற்கு தீர்வு கண்டு தனியாரிடம் மின்துறையை அரசு ஒப்படைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.இந்த நிலையில் மாபெரும் இமாலய ஊழலுக்கு முதல்-அமைச்சரும், மின்துறை அமைச்சரும் கைகோர்த்துள்ளனர். மத்திய அரசிடம் சுமார் ரூ.251 கோடி கடனாக பெற்று முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டிய பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இந்த தொகையை புதுவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வரும்காலத்தில் அரசே திருப்பி செலுத்த உள்ளது. மின்துறையை தனியாரிடம் ஒப் படைக்க முடிவெடுத்துவிட்டு, அவசரகதியில் மக்கள் வரிப்பணத்தில் மீட்டரை மாற்ற ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன? வரவிருக்கும் மின்துறை தனியார் நிறுவன முதலாளிக்காகவே மக்கள் வரிப்பணம் ரூ.251 கோடி செலவிடப்படுகிறது.

    இந்த நிதி மாற்று வழியில் இணைந்த கைகளுக்குத்தான் திரும்பும் என அரசு பதவியில் உள்ள உயர் அதிகாரிகளே வேதனை தெரிவிக்கின்றனர். விஞ்ஞா னரீதியில் மாபெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் இத்திட்டத்தை உடனடியாக முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்சி த்தலைமை அனுமதி பெற்று சட்ட போராட்டங்களை அ.தி.மு.க. முன்னெடுக்கும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏனாம் பிராந்தியத்தில் தோல்வியை தழுவிய முதல்- அமைச்சர் முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார்.
    • சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏனாம் பிராந்தியத்தில் தோல்வியை தழுவிய முதல்- அமைச்சர் முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட. பதவியை வைத்துக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார்.

    முதல்-அமைச்சர் அளித்த பதவி மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய வழங்கப்பட்டது அல்ல, சுயேச்சை எம்.எல்.ஏ.வின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டி புதைப்பதற்குத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஒரே மேடையில் எம்.எல்.ஏ.வை வைத்துக் கொண்டே, முன்னாள் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு ஆணையை வழங்க வைத்துள்ளார். இதை தன்மானம் உள்ள எவரும் தட்டிக்கேட்பது நியாயமான ஒன்று.

    சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார். இந்த காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டாரா ? இதே நிலையை இன்னாள் முதல்- அமைச்சர், முன்னாள் முதல்- அமைச்சராக ஆகும்போது ஏற்றுக்கொள்வாரா?

    முதல்-அமைச்சரின் சர்வாதிகார செயல்பாடை தட்டிக்கேட்காமல், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மவுனம் காப்பது உங்கள் உரிமையை மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறேன்.

    பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.வுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை புதுவை மாநில மக்கள், பா.ஜனதா கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது.நாகரீகமற்ற இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை கவர்னர் தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.

    இல்லாவிட்டால் கவர்னர் தனக்குள்ள. அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி, புதுவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்கலாம். இதேநிலை இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வருகிற காலத்தில் ஏற்படலாம்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை தொகுதி பூக்கார வீதி, அம்பலவாணர் நகர் சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு 9 மணியளவில் புதைவட மின்கேபிள் பழுதால் மின்சாரம் தடைபட்டது. 11 மணி வரை மின்சாரம் வரவில்லை. மின்துறை அதிகாரிகளும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து வந்தார். பொதுமக்கள் வையாபுரி மணிகண்டன் தலைமையில் காந்தி வீதியில் போலீஸ் நிலையம் அருகே தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மின்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சு

    வார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மணி நேரத்தில் மின் பழுது சரிசெய்யப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து 12 மணிக்கு மறியல் கைவிடப் பட்டது.

    இருப்பினும் மின்கேபிள் பழுதை சீரமைக்க பல மணி நேரம் ஆனது. இன்று அதிகாலை 4 மணிக்குத்தான் புதைவட மின் கேபிள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

    • பொதுப்பணித்துறைக்கு வையாபுரி மணிகண்டன் கண்டனம்
    • மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     புதுவை முத்தியால் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் பொதுப்பணித் துறையினர் ½ கிலோமீட்டர் தூரம் சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக சாலைகள் பெயர்க்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு பின்னர் மணல் கொண்டு மூடப்படுகிறது.

    இதனால் சாலைகளில் ஆங்காங்கே அபாயகரமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை பள்ளங்களில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். பொதுபணி துறையின் அலட்சிய போக்கை வன்மையாக கண்டிக்கி றோம்.

    சிமெண்டு சாலையை பெயர்த்து குழாய் அமைக்கும் போது குறிப்பிட்ட மீட்டர் இடைவெளியில் குழாய்களை பொருத்தி பணிகளை முடித்து அடுத்த பகுதி பணிகளை தொடங்க வேண்டும்.

     மக்கள் பள்ளங்களில் சிக்கி காயமடைவதை தடுக்க பிரதி பலிப்பான்கள் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.

     இதைவிடுத்து நீளமாக பள்ளம் தோண்டி பணி களை முடித்தபின் சாலை அமைக்க திட்டமிடுவது அதிகாரிகளின் திறமை யின்மையை காட்டுகிறது. எனவே பொதுப்பணித் துறையினர் உடனடியாக பணிகள் முடிந்த இடத்தில் சிமெண்ட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். இரவு நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தடுப்புகள், பிரதிப லிப்பான்களை பொருத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வையாபுரி மணிகண்டன் ஆவேசம்
    • ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில இளைஞர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை முதல்-அமைச்சர் செய்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை அவர் குழிதோண்டி புதைத்துள்ளார்.

    புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் 8 ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இங்கு பல துறைகளில் டாக்டர்கள் இல்லை. பணிபுரியும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. மாணவர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல்வேறு அடிப்படை யான, அத்தியா வசியமான தேவை களைக்கூட கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்ய வில்லை. இதுகுறித்து மருத்துவ ஆணையத்துக்கு பல புகார்கள் சென்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாக சீர்கேடுகளை களையும்படி புதுவை அரசுக்கு இந்திய மருத்துவ ஆணையம் 6 மாதம் முன்பே எச்சரித்துள்ளது. ஆனால் சுகாதாரதுறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேண்டுமென்றே, திட்டமிட்டு சதி செய்து அரசு மருத்துவக் கல்லூரி யின் சீர்கேடுகளை களைய வில்லை.

    அதேநேரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கூடுதலாக 200 மருத்துவ இடங்களை பெற்றுள்ளன. புதுவை அரசு மருத்துவக்கல்லூரியை மூட வேண்டும், தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என அரசே திட்டமிட்டு சதி செய்துள்ளது. இந்த சதியில் மருத்துவக் கல்லூரி அதிகாரி களுக்கும் தொடர்புள்ளது. புதுவை அரசின் 180 மருத்துவ இடங்களை ரத்து செய்ய பல கோடி கைமாறியுள்ளதாக மருத்து வத்துறை அதிகாரி களே குற்றம்சாட்டுகின்றனர். இது மருத்துவம் படிக்க வேண்டும் என கனவோடு படித்த புதுவை மாநில ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் துரோகம்.

    கல்லூரியின் அங்கீகாரம் ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கனவே மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறி யாகியுள்ளது. எனவே உடனடியாக இவ்விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும்.

    பிரதமரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வையாபுரி மணிகண்டன் கண்டனம்
    • வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு எடுத்துக்கூறிய ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் காத்துக்கிடந்த வரலாறு தெரியாமல் தான் தோன்றித் தனமாக தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

    அ.தி.மு.கவுடன் கூட்டணி தொட ரக்கூடாது என்ற எண்ணத்தோடு அண்ணாமலை செயல்ப டுவது அப்பட்டமாக தெரிகிறது.

    தனது அநாகரீகமான பேச்சுக்கு தமிழ்நாடு பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி, உடனடியாக தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கோடான கோடி அ.தி.மு.க. தொண் டர்களின் உள்ளக் கொதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வையாபுரி மணிகண்டன் திடுக் தகவல்
    • சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நில அபகரிப்பு பின்னணியில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு உண்டு. அவர் சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரின் குற்றம் நிரூபணமாகியுள்ளது.

    வில்லியனூரில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பொதுப் பதையாக காட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனைகளை சிலர் ரூ.100 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். இதிலும் ஆளும் கட்சியில் முக்கிய பதவி யில் உள்ளவர்க ளுக்கு தொடர்பு உள்ளது. தற்போது மணக்குள விநாயகர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும், கோவில் நிலத்தை பொதுப் பாதையாக ஏமாற்றி விற்றுள்ளனர். மனைகளை வாங்கிய 500-க்கும் மேற்பட்டோர் பாதையின்றி கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர்.

    எனவே கோவில் நிலத்தை பொது பாதையாக காண்பித்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவை அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஆட்சியாளர்களின் மோசடிகளுக்கு துணை செல்லாமல் வழக்கு விசாரணை நடைபெற சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல்கள் முழுமையாக வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
    • அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் துயரத்தை போக்க அனைத்து ரேஷன் கார்டுக்கும், சிலிண்டருக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    தற்போது அரசாணையில் சிவப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300, மஞ்சள்கார்டுக்கு ரூ.150 என அறிவித்துள்ளது மிகவும் வேதனை தரக்கூடிய செயல். சட்டசபையில் அறிவித்தபடி மஞ்சள் கார்டுக்கு ரூ.300 கியாஸ் மானியம் வழங்காதது மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட செயலாக உள்ளது. இது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தாய்மார்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.

    புதுவையில் ஆயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்கள் மஞ்சள்கா ர்டுதான் வைத்துள்ளனர். அவர்களுக்கு சிலிண்டர் மானியத்தை குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல.

    முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி அனைத்து ரேஷன்கார்டுக்கும் சிலிண்டருக்கு ரூ.300 வீதம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் வாக்குறுதியில் இருந்து மீறக்கூடாது

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசியளவில் கல்வியில் முதலிடம் பிடித்து வருவதாக அரசு விழாக்களில் புதுவை முதல அமைச்சர் தற்பெருமை பேசி வருகிறார். ஆனால் புதுவை மாநிலத்தில் பட்டம் படித்த மாணவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.

    காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் தொடர்ச்சியாக புதுவை மாநில மாணவர்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைப்பு பாடப்பிரிவு களிலும் இடஒதுக்கீடு வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

    பல்கலைக்கழகம் தொடங்கப்படும் போது அளித்த 21 பாடப் பிரிவுகளில் மட்டுமே 25 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை அளிக்கும் 36 முதுநிலை பாடப்பிரிவுகள், 10 ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகள், 2 முதல்நிலை பட்டய படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த ஒதுக்கீடும் அளிப்பதில்லை.

    இது புதுவை மாநில மாணவர்களை வஞ்சிக்கும் செயல்.மத்திய கல்வித்துறை இணை அமைச்சர், புதுவை பல்கலைக்கழகத்தில் சட்ட விதிமுறைகளின்படி குடியிருப்பு அடிப்படை யிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது. 25 சதவீத இடஒதுக்கீடு கோரி எந்த முன்மொழிவும் பரிசீலனைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் இந்த பதில், மத்திய பல்கலைக்கழகம் புதுவை மாநில மாணவர்க ளுக்கு பொய்யான தகவல்களைக் கூறி துரோகம் இழைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. புதுவை மாநில மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடையும் பல்கலைக்கழகம் ரத்து செய்யும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    புதுவை கல்வி கேந்திரமாக விளங்குகிறது. பிரதமர் கூறியபடி, புதுவை கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என முதல அமைச்சர் மேடைக்கு மேடை வெறும் வாய்ப்பேச்சு பேசினால் மட்டும் போதாது, அதை செயலில் காண்பிக்க வேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவு களிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடை பெருந்தலை வர் காமராஜர் வழியில் முதல அமைச்சர் புதுவை மண்ணின் மைந்தர்களுக்கு கட்டாயம் பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சி.பி.ஐ. இயக்குனருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    • சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறுவதில் பெரிய மோசடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள வர்களும், அவர்களுக்கு கைக்கூலியாக செயல்படும் சில அரசியல்வாதிகளும், சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பி னருக்கான சான்றிதழ், மத்திய அரசு அலுவலக பணியிட மாற்று சான்றிதழ் என பல போலி சான்றிதழ்களை கொடுத்து மருத்துவ இடங்களை அபகரிக்கின்றனர். மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது.

    சட்ட விதிகளின்படி புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் சிலரின் சுயலாப நோக்கால் தட்டிப்பறிக்கப்படுகிறது. எனவே புதுவையில் நடைபெறும் இந்த மாபெரும் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், அதிகாரிகளுக்கு துணை செல்லும் ஆட்சியாளர்கள், இடைத்தரகர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சி.பி.ஐ. இயக்குனரிடம் வையாபுரி மணிகண்டன் புகார்
    • அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்கு னருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கதிர்காமம் அரசு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது.

    மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படு வதில்லை. நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் புறக்கணி க்கின்றனர்.

    சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவகல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்கின்றனர்.

    தற்போது பிரெஞ்சு வாழ் மக்கள் உள் ஒதுக்கீடு என புதிதாக விஞ்ஞானரீதி யிலான ஊழலில் இறங்கி யுள்ளனர். என்.ஆர்.ஐ.யிடம் பெற வேண்டிய சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான கட்டணத்தை பெறாமல் தன்னிச்சையாக கட்டணத்தை சுமார் ரூ.4 லட்சமாக குறைக்கின்றனர்.

    இதனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

    தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் மீது எழுந்து வரும் ஊழல் புகார்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே இனியும் தாமதிக்காமல், அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மீது சி.பி.ஐ உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு எந்த திட்டமிடலும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியது. இந்த கோப்பையும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முறைப்படி தயாரித்து அனுப்பாததால் பல்வேறு விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

    இதனால் இன்றுவரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. காலத்தோடு மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாமல் புதுவை மாநில மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு முறை ப்படி கலந்தாய்வைக்கூட நடத்த முடியாமல் புதுவை அரசு செயல்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளி மாணவ ர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் எண்ணம் உண்மையாக இருந்தால், சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்- அமைச்சர், அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்து சென்று அனுமதி பெற வேண்டும்.மாணவர்களின் எதிர்கால த்தோடு விளையாட கூடாது. இந்த ஆண்டு இடஒதுக்கீடு பெற முடியவில்லை என்றால் வெளிப்படையாக அறிவித்து மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    ×