search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valor Day"

    • அ.ம.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வசந்த்குமார் ஜெயின் தலைமை தாங்கினார்.

    வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்

    நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் என்.ஜி.தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துக் குமார் வரவேற்றார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பிரிவு செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன், தலைமை கழக பேச்சாளர் காரை கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் குறித்து பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரி ராமநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆதம், சரளா தினகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் டி.ஜி.மணி, சிட்டிபாபு, ராஜாமணி, மணிவண்ணன், நகர செயலாளர்கள் கண்ணதாசன், முத்துமுஹம்மத் யூனூஸ், சீனிவாசன், ஐயப்பன் உள்பட மாவட்ட பிற அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவரணி செயலாளர் பரத் நன்றி கூறினார்.

    • மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ எம்.பி. பேசுகிறார்.
    • திரளாக பங்கேற்க பூமிநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (25-ந் தேதி) வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ரோட்டில் உள்ள ஒபுளா படித்துறை சந்திப்பில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத் திற்கு மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மொழிப்போர் தியாகி களுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திராவிட இயக்க போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் செய லாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×