search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
    X

    வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

    • மதுரையில் நாளை ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ எம்.பி. பேசுகிறார்.
    • திரளாக பங்கேற்க பூமிநாதன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் ம.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (25-ந் தேதி) வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ரோட்டில் உள்ள ஒபுளா படித்துறை சந்திப்பில் மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத் திற்கு மதுரை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். மாநில தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கிறார்கள்.

    கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மொழிப்போர் தியாகி களுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கும் வகையில் ம.தி.மு.க. சார்பில் மதுரை ஓபுளா படித்துறையில் நாளை (புதன்கிழமை) மாலை நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் திராவிட இயக்க போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணிகளின் செய லாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×