search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallalar memorial day"

    • மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப் பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடி வைக்க வேண்டும். எனவே நாளை மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

    உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால்சம்மந்தப்ப ட்டடாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்த போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வள்ளலார் நினைவு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் 5-ந்தேதி மதுக்கடைகள் அடைக்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ''வள்ளலார் நினைவு தினம்'' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் 5-ந்தேதி அன்று மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5-ந் தேதி மதுபான சில்லரை விற்பனையும் நடைபெறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×