search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Shooting"

    துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
    ஓக்லஹோமா:

    அமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

    டெக்சாஸில் உள்ள  ஒரு தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில்  ஓக்லஹோமா நகரில் உள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் நேற்று புகுந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

    தகவல் அறிந்து அந்த பகுதிக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்தனர்.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை துணைத் தலைவர் ஜொனாதன் ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்த நிலையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். 

    இந்த துப்பாக்கிச் சூடு எதற்காக நடத்தப்பட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி இறந்தார் என்பது குறித்த உடனடியாக கண்டறிய முடியவில்லை என ப்ரூக்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

    இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், அந்த மருத்துவமனை வளாகமே ஒரு போர் களம் போல் காட்சி அளித்ததாகவும்
    காவல்துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இந்தியர் ஒருவர் பலியானார். #USBankShooting

    நியூயார்க்:

    அமெரிக்காவில் சின்சினாட்டி நகரில் பவுன் டெயன் சதுக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான்.

    இதில் பிரித்வி ராஜ் கான்டோ (25), ரிச்சர்ட் நியூகாமர் (64), லூயிஸ் பெலிப் கால்டெரான் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் கொலையாளியுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அதில் கொலையாளி உயிரிழந்தான். அவனது பெயர் ஓமர் சான்டா பெரேஷ் (29) என போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரில் பிரித்விராஜ் இந்தியர் என தெரிய வந்துள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலியை சேர்ந்தவர்.

    வேலூரில் உள்ள வி.ஐ.டி.யில் பி.டெக் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. படித்தார். சின்சினாட்டியில் துப்பாக்கி சூடு நடந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார்.

    இவரது தந்தை கோபிநாத் விஜயவாடாவில் ஆந்திர மாநில வீட்டு வசதி வாரியத்தில் துணை செயற்பொறியாளராக பணிபுரிகிறார். தாயார் பெயர் சுதாராணி. குண்டூர் மாவட்டம் தெனாலியில் வசிக்கின்றனர். மனோக்னா என்ற தங்கை உள்ளார்.

    இவர் கே.எல்.பல்கலைக் கழகத்தில் ‘பி.டெக்’ 3-வது ஆண்டு படித்து வருகிறார். பிரித்விராஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக அவர் சில மாதங்களில் இந்தியா திரும்ப இருந்தார். #USBankShooting

    ×