search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran supporters remove"

    தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியை அணுகுவது என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #18MLAs #ThangaTamilSelvan
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு கூறினார். மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது என்று கூறினார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவிக்கையில் வழக்கு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்வதால் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவரால் வழக்கை வாபஸ் பெற முடியவில்லை.

    இதுபற்றி தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எங்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள 3-வது நீதிபதி தினமும் வழக்கை விசாரிக்க போவதாக கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

    விசாரணை முடிந்ததும் தீர்ப்பையும் விரைந்து சொன்னால் தொகுதி மக்களுக்கு நல்லது.

    தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறப் போவதாக ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் எந்த நீதிபதியிடம் இதை கொடுப்பது என்பதில் சிக்கல் நிலவுகிறது.

    இரு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறி உள்ளதால் அவர்கள் இருவர் முன்னிலையில் மனு கொடுக்க வேண்டுமா? அல்லது 3-வது நீதிபதியிடம் வாபஸ் மனுவை கொடுக்க வேண்டுமா? என்ற சட்ட சிக்கல் ஏற்படுகிறது.

    மனு கொடுத்தாலும் அதை நீதிபதிகள் ஏற்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே இதுபற்றி மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்த பிறகு தான் முடிவு செய்ய முடியும்.

    தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்ததற்காக எனக்கு அட்வகேட் ஜெனரல் நோட்டீசு அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்துக்கு பதில் அளிக்க நாளை மறுநாள் நான், ஐகோர்ட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAs #ThangaTamilSelvan
    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம். #18mlacase
    சென்னை:

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டம்.

    2017 பிப்ரவரி 16 - தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு.

    2017 பிப்ரவரி 18 - அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

    2017 ஆகஸ்ட் 22 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவரை மாற்ற கோரி டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏ.கள் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    2017 ஆகஸ்ட் 23 - தமிழக கவர்னரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசை தனது பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 24 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறாடா புகார் அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 28 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 5 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் இடைக்கால விளக்கம் அளித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி செப்டம்பர் 7-ந்தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 7 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் விசாரணைக்கு நேரில் ஆஜாரானார்கள். கெறாடா சார்பில் ஆஜராகதால் சபாநாயகர் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    2017 செப்டம்பர் 12 - தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20-ந்தேதி வரை பெரும்பான்மை நிரூபிக்க இடைக்கால தடை விதித்தார். அதுவரை குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்றதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவு.

    2017 செப்டம்பர் 14 - அரசு கெறாடா அளித்த புகார் மனுவை அளிக்க 19 எம்.எல்.ஏக்கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.


    2017 செப்டம்பர் 16 - டி.டி.வி தினகரன் ஆதரவு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

    2017 செப்டம்பர் 18 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவிட்டார். இரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக கடிதம் அளித்த ஜக்கையன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அவருக்கு தகுதி நீக்கம் செய்யவில்லை என விளக்கம்.

    2017 செப்டம்பர் 19 - தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

    2017 செப்டம்பர் 20 - தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த மனு மீது நீதிபதி துரைசாமி விசாரணை. மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பேரவைக்குள் எடுத்து சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

    அக்டோபர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முதல் நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணை நடந்தது.

    2017 நவம்பர் 2 - வழக்கின் முக்கியத்துவம் கருதி டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவு.

    2017 நவம்பர் 6 - எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரணை கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு.

    நவம்பர் 16-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    2017 நவம்பர் 16 - தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.

    2018 ஜனவரி 18 - அனைத்து தரப்பும் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    2018 ஜனவரி 23 - அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.

    2018 ஜூன் 14 - தீர்ப்பு வெளியிடப்பட்டது. #18mlacase
    ×