என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trees fell"

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    • மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், ஆங்காங்கே சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மஞ்சூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலுமே காலை முதல் மாலை வரை இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.

    தொடர் மழைக்கு குன்னுாரில் கிளண்டேல், உலிக்கல், ஜிம்கானா பகுதிகளில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் குன்னுார்-மேட்டுப்பா–ளையம் சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னூர் ஆர்செடின் சாலையில் கிளன்டேல் தேயிலை தொழிற்சாலை அருகே மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    இதேபோல் காந்திபுரம், கக்காச்சி மேல் பாரதி நகர், கேத்தி, எடப்பள்ளி, கன்னிமாரியம்மன் கோவில் பகுதிகளில், 11 வீடுகளில் வீட்டின் ஒரு பகுதி மழைக்கு இடிந்து விழுந்தது.இந்த பகுதிகளை கூடுதல் கலெக்டர் பூஷன் குமார் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா, 4,100 ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.

    குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. இேதபோல் கோத்தகிரி மிளிதேன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. காக்காசோலை கிராமத்தில் பார்வதி என்பவரது வீட்டிற்கு பின்புறம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கொடநாடு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வீட்டிற்கு அருகே இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் மழைக்கு ஊட்டி, குந்தா பகுதிகளில் 5 வீடுகள் சேதமானது.

    ஊட்டி கோடப்பம்மந்து கால்வாயை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் இருந்து ரெயில் நிலையம் அருகே உள்ள சாலைக்கு கழிவுநீர் வராமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தர விட்டார்.ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஊட்டி சுற்று வட்டாரத்தில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. வார இறுதி நாளான நேற்று, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் கணிசமாக வந்தனர். குளிர் மற்றும் சாரல் மழையில் குடைபிடித்தவாறு பயணியர் சுற்றுலா தலங்களில் வலம் வந்ததை பார்க்க முடிந்தது.

    தொடர் மழையால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    • மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதில் வீரகனூர், நங்கவள்ளி, கரியகோவில், ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    186.6 மி.மீ மழை

    மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கெங்கவல்லி -30, கரிய கோவில் -26, ஏற்காடு -25, ஓமலூர் -11, பெத்தநாயக்கன்பாளையம் -10.5, சேலம் -8, தம்மம்பட்டி -7, காடையாம்பட்டி -5, சங்ககிரி 3.1, ஆத்தூர் -2, ஆனை மடுவு -2, எடப்பாடி -1 என மாவட்டம் முழுவதும் 186.6 மி.மீ மழை பதிவானது. இன்று காலை மாவட்ட முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.

    நாமக்கல்

    நாமக்கல்லில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம் சாலை சந்திப்பு, குட்டை தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் குட்டை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மரங்கள் சாய்ந்தன

    வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், நாச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மாலையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×