search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree fell"

    • கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது.
    • டிரைவர் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மலைக்கிராமங்களான பெரும்பாறை, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, காமனூர் வழியாக தாண்டிக்குடிக்கு தினமும் காலை 10.45 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    நேற்று காலையில் வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அந்த அரசு பஸ் புறப்பட்ட து. அதில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை வத்த லக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    மதியம் 1 மணிக்கு காமனூர் வழியாக மலை ப்பாதையில் அந்த பஸ் தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதை கவனித்த டிரைவர் சுரேஷ் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் சாய்ந்து விழுந்ததை கண்டு பஸ்சை முன் கூட்டியே நிறுத்திய டிரைவரை பயணிகளும், பொது மக்களும் பாராட்டினர்.

    இதுகுறித்து தகவலறிந்த காமனூர் ஊராட்சி ஊழிய ர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் தாண்டிக்குடி மலைப்பா தையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது.
    • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் அளவு 105 டிகிரியை தாண்டியது. இதனால் விழுப்புரம் நகர பகுதி பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை வெறிச்சோடிக் கிடந்தது. மே மாதம் இறுதியில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த நிலையிலும், ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் லேசானது முதல், சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை விழுப்புரத்தில் பெய்யாதா? வெயிலின் தாக்கம் குறையாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் விழுப்புரத்தில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகரமே குளிர்ந்தது என்றால் மிகையாகாது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அதேசமயம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது. இதே போல விழுப்புரம் நகர சாலைகளில் இருந்த பல்வேறு மரங்கள் சாலையில் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை விட்டவுடன், நகராட்சி நிர்வாகம், பொதுப் பணித்துறை, வனத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர்செய்தனர்.

    • நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம்.
    • மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உதய் நகர் நெடுஞ்சாலை அருகே கார் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் சர்வீஸ் சென்டருக்கு வந்த காரை தனது செட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் திடீரென அருகில் இருந்தமரம் முறிந்து அருகே இருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. அதேபோல அருகே பங்க் கடை நடத்தி ஒருவர் ராம் இவர் கடை மீதும் மரம் விழுந்து கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது. மரம் விழுந்தவிபத்தில் கார் மற்றும் கடையில் இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.மரம் நள்ளிரவு விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெலிங்டன் அருகே ஊட்டி மலைரெயில் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து, இயற்கை எழிலை கண்டு ரசித்து செல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் மலைரெயில் இயக்கப்படுகிறது. மலைரெயில் பாதையின் ஓரங்களில் ஓங்கி வளர்ந்த ராட்சத மரங்கள் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மலைரெயில் பாதையில் விழுவது வாடிக்கையாகி விட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் வெலிங்டன் ரெயில் நிலையம் அருகே மலைரெயில் பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்ட மலைரெயில் வெலிங்டன் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதேபோல ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி வந்த பயணிகள் ரெயில் அருவங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதியடைந்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மின்வாள் மூலம் மலைரெயில் பாதையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் சேதம் அடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2½ மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
    ×