என் மலர்
நீங்கள் தேடியது "Treatment in USA"
உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்களை விஜயகாந்த் வெளியிடப்பட்டுள்ளார். #DMDK #Vijayakanth
சென்னை:
சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த், அதே வேகத்துடன் அரசியல் களத்திலும் கால் பதித்தார்.
தே.மு.தி.க.வை தொடங்கிய பின்னர் அவரது மேடைப் பேச்சுக்களும் கவனம் ஈர்த்தன. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் மேடைகளில் மணிக்கணக்கில் பேசினார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் என்றால் அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்திழுந்த அவரது பேச்சுக்கள் நாளடைவில் கிண்டலுக்குள்ளானது.
விஜயகாந்த் என்ன பேசுகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது குரல் மாறிப்போனது. அதே நேரத்தில் பேச்சாலேயே பேசப்பட்ட விஜயகாந்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலையில் நாமும் நீந்தி கரை சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய விஜயகாந்த் பா.ஜனதாவுடன் கை கோர்த்தார். ஆனால் அதுவும் கையை கடித்துவிட்டது. ஒரு இடத்தில் கூட தே.மு.தி.க.வால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்தின் எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே நிலவுகிறது.

இதற்காக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்தே இதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் பின்னர் அவர் சென்னை திரும்புகிறார். உடல் ஆரோக்கியத்துடன், விஜயகாந்த் மீண்டும் அரசியல் பணிகளில் வேகம் காட்டுவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இதன்படி இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
சினிமாவில் தனது கணீர் குரல் மூலமாக அனல் தெறிக்கும் வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்த விஜயகாந்த், அதே வேகத்துடன் அரசியல் களத்திலும் கால் பதித்தார்.
தே.மு.தி.க.வை தொடங்கிய பின்னர் அவரது மேடைப் பேச்சுக்களும் கவனம் ஈர்த்தன. கட்சி தொடங்கிய புதிதில் விஜயகாந்த் மேடைகளில் மணிக்கணக்கில் பேசினார். விஜயகாந்த் பொதுக்கூட்டம் என்றால் அவர் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்திழுந்த அவரது பேச்சுக்கள் நாளடைவில் கிண்டலுக்குள்ளானது.
விஜயகாந்த் என்ன பேசுகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது குரல் மாறிப்போனது. அதே நேரத்தில் பேச்சாலேயே பேசப்பட்ட விஜயகாந்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பேச முடியாத நிலையும் ஏற்பட்டது.
அரசியல் பயணத்தில் யாருடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று கூறிவந்த விஜயகாந்த் பின்னர், ‘‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இது அரசியல் பாதையில் அவருக்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கனவுடன், மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது கட்சிக்கு இறங்குமுகமானது. விஜயகாந்தின் உடல் நல குறைவும், கட்சிக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவும் தே.மு.தி.க. தொண்டர்களை சோர்வடைய செய்தது.

தைராய்டு மற்றும் குரல் வளை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 7-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 40 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ள விஜயகாந்துக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் தனது உடல் நிலை பற்றிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்தே இதனை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் புத்துணர்வோடு தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்று நாளையுடன் ஒரு மாதம் முடிகிறது. இன்னும்10 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதன்படி இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பும் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் விஜயகாந்தின் உடல் நிலை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். #KeralaCM #PinarayiVijayan
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.
அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.
பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.
பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோயுக்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.
பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அப்போது அது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கியூமன் வைராலஜி என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். #KeralaCM #PinarayiVijayan
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வருகிற 19-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மினி சோட்டா ரோஸ்செஸ்டர் மயோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுகிறார். அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அவர் கேரளா திரும்புகிறார்.
அவருடன் அவரது மனைவி கமலாவும் செல்கிறார். பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது தொடர்பான ஒப்புதல் கேட்டு மத்திய வெளியுறவுத்துறைக்கு அவரது பயணத்திட்டம் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் பினராயி விஜயன் அமெரிக்கா செல்கிறார்.
பினராயி விஜயனின் அமெரிக்க பயணத்தை அவரது தனி செயலாளர் ஜெயராஜா உறுதிப்படுத்தி உள்ளார்.
பினராயி விஜயன் அமெரிக்காவில் சிகிச்சை பெற உள்ள ஆஸ்பத்திரி புற்றுநோய் சிகிச்சைக்கு புகழ் பெற்றது ஆகும். இதற்கு முன்பு முன்னாள் சபாநாயகர் கார்த்திக்கேயன், நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோயுக்காக சிகிச்சை பெற்று உள்ளனர்.
பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். அப்போது அது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என்று அறிவிக்கப்பட்டது.
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 17 பேர் உயிரிழந்தனர். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பினராயி விஜயன் தீவிர முயற்சி எடுத்தார். இதனை பாராட்டி அவருக்கு அமெரிக்காவில் பால்டிமோரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கியூமன் வைராலஜி என்ற அமைப்பு அவரை கவுரவப்படுத்தி விருது வழங்கி இருந்தது. இதற்காக அவர் அமெரிக்கா சென்று இருந்தபோது அங்குள்ள ஆஸ்பத்திரியில் முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்திருந்தார். தற்போது 2-வது கட்டமாக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். #KeralaCM #PinarayiVijayan






