search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tobacco packets"

    • 384 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ் பெக்டர் சாந்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட 384 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பேக்கரி உரிமையாளரை கைது செய்து 384 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் சிறப்பு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் திருவெண்ணைநல்லூர் போலீஸ் ஷாப் இன்ஸ்பெக்டர் பிரபு தலை மையிலான போலீசார் நேற்று இரவு திருக்கோவிலூரில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் வழியில் உள்ள சித்தலிங்க மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வேகமாக வந்த இரண்டு நபரை நிறுத்தி அவர்களிடம் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்க ளிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஹோன்ஸ் 1140 பாக்கெட்டுகள் விமல் பாக்கெட் 1200 என மொ த்தம் 2340 பாக்கட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் திருக்கோ விலூரைச் சேர்ந்த சதீஷ் (வயது 55) சித்தலிங்கமடம் பகுதியில் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பது தெரிய வரவே திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து 2 பேரையும் செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • மதுரையில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சோதனை நடத்தினார்.

    மதுரை

    மதுரை தெற்குவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் எழுத்தாணிக்கார தெருவில் அதிரடி சோதனை நடத்தினார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த 2,229 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக வில்லாபுரம் சக்திவேல் நகரைச் சேர்ந்த அசோக்குமார் (51) என்பவரை கைது செய்தனர்.

    ×