search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேக்கரியில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை
    X

    பேக்கரியில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை

    • 384 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ் பெக்டர் சாந்தி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு தடை செய்யப்பட்ட 384 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து பேக்கரி உரிமையாளரை கைது செய்து 384 புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×