search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thomas mount"

    சென்னை பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளத்தின் தடுப்புச் சுவரை ரெயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை பரங்கிமலையில் கடந்த மாதம் மின்சார ரெயிலில் படியில் பயணம் செய்தவர்கள் ரெயில்வே தடுப்புகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளையும் கண்டனங்களையும் உருவாக்கியது. மேலும், ரெயில்வே தடுப்புகளை அகற்றுமாறு ரெயில்வே துறை அதிகாரிகாளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



    இந்நிலையில், தெற்கு ரயில்வே பொதுமேலாளரின் உத்தரவின் பேரில், பழவந்தாங்கல் ரெயில்நிலையத்தில் உள்ள பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில், பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள அபாயகரமான பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த பரங்கிமலை விபத்து உண்டான அந்த தடுப்புச் சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த பக்கவாட்டு தடுப்புச் சுவரும் நீக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    சென்னை பரங்கிமலை பகுதியில் மின்சார ரெயிலில் படிகட்டில் பயணம் செய்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #ElectricTrainAccident #CM
    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் போக்குவரத்து எளிதானதும், செலவு குறைவானதும் ஆகும். இதனால் பொதுமக்கள் அதிகமாக இந்த ரெயில் சேவையை உபயோகித்து வருகின்றனர். ஆனால், ரெயில்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் குறைவான ரயில் பெட்டிகளால் பொதுமக்கள் அவதியுறுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால், படிகட்டுகளில் பயணம் செய்வதும், விபத்துக்கள் நிகழ்வதும் அவ்வப்போது நிகழ்கிறது.

    இந்நிலையில், இன்று காலை பரங்கி மலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, படிகட்டில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



    இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #ElectricTrainAccident #CM
    ×