search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The public caught"

    • சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
    • அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் பணிக்கம்பட்டி அருகே உள்ள இலந்த குட்டை என்ற பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய அந்தப் பெண் ரோட்டை விட்டு திடீரென கீழே இறங்கியதால், ஸ்கூட்டர் சரிந்ததாக கூறப்படுகிறது.

    விபத்தை ஏற்படுத்தி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்றதால், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த லாரியை தொடர்ந்து வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சிறைபிடிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.
    • மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு, மார்ச். 31-

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (57). இவர் அங்குள்ள கைத்தறி நெசவாளர் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு வெளியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளை யாரோ இயக்கும் சத்தம் கேட்டுள்ளது.

    உடனடியாக பாலசுப்பி ரமணியம் வெளியில் சென்று பார்த்தபோது ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.

    ஆனால் மோட்டார் சைக்கிளை திருடி சென்றவர் அந்த பாதையில் அதற்கு மேல் செல்ல வழி இல்லாததால் திரும்பி வந்துள்ளார்.

    அவரை பாலசுப்பிர மணியம் மற்றும் அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து காஞ்சிக்கோயில் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள செம்மண் குழி மேடு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காஞ்சிக்கோயில் போலீசார் கன்னியப்பன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர் திருடி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளை மீட்டு பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனர்.

    ×