search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The police have registered a case and are investigating"

    • விஜயன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் மூங்கில்பாடி அருகே உள்ள சேனைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 53). இவர் தனியார் கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சேனைக்கவுண்டனூர் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மினி டெம்போ வேன் நேருக்கு நேர் மோதியது. இதில் விஜயன் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் ரோந்து பணி.
    • டிரைவர் தப்பி ஓட்டம்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமம் கள்ளியூர் பகுதியில் பொக்ந்திலைன் எந்திரம் மூலம் பள்ளம் தோன்றி டிப்பர் லாரியில் மண் கடத்துவதாக திருப்பத்தூர் சப்-லெக்டருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சப்-கலெக்டர் லட்சுமி உத்தரவின்படி நாட்டறம்பள்ளி தாசில்தார் (பொறுப்பு) சுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் நந்தினி கொத்தூர் கிராமம் நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்துறையினர் கள்ளியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து டிரைவர்கள் தப்பி ஓடினர்.

    இதனையடுத்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி :

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளிபட்டு ஊராட்சிக்குட்பட்ட கண்ணன் நகர் பகுதியை சேர்ந்த ரவி முள்ளிபட்டு ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பகுதிநேரமாக நெசவுத் தொழிலும் செய்து வருகின்றார். ரவிக்கு செல்வி என்ற மனைவியும் நவீன் என்ற மகனும் உள்ளனர்.

    மேலும் நேற்று முன்தினம் இரவு ரவிக்கும் செல்விக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது இதனால் மனவேதனை அடைந்த செல்வி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    உடல் முழுவதும் தீ பரவியதால் கூச்சலிட்டு அலறினார் அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை செல்வியை மீட்டு தீ காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் செல்வி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். செல்வின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்து கணவர் ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×