search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    X
    கோப்புப்படம்

    மண் கடத்திய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

    • அதிகாரிகள் ரோந்து பணி.
    • டிரைவர் தப்பி ஓட்டம்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமம் கள்ளியூர் பகுதியில் பொக்ந்திலைன் எந்திரம் மூலம் பள்ளம் தோன்றி டிப்பர் லாரியில் மண் கடத்துவதாக திருப்பத்தூர் சப்-லெக்டருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சப்-கலெக்டர் லட்சுமி உத்தரவின்படி நாட்டறம்பள்ளி தாசில்தார் (பொறுப்பு) சுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் நந்தினி கொத்தூர் கிராமம் நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்துறையினர் கள்ளியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து டிரைவர்கள் தப்பி ஓடினர்.

    இதனையடுத்து மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×