search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The laborer"

    • கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
    • 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வானதிபட்டி பகு தியைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 36) கட்டிடத் தொழிலாளியான இவர், சூரமங்கலம் அவ்வை நகர் பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கோவிந்த ராஜ் பணியில் இருந்த போது 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந் தார். இதில் அவருக்கு பலத்த படுகாயம் ஏற்ப்பட் டது. இதையடுத்து கோவிந்த ராஜை சக தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்த ராஜ் பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து கோவிந்தராஜன் மனைவி சுகன்யா கொடுத்த புகார் பேரில் சூரமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இறந்து போன கோவிந்தராஜிற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

    • கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
    • அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார்.

    ஈரோடு,

    ஈரோடு அடுத்துள்ள பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாலை அங்குள்ள விவசாய தோட்டத்து கிணற்றின் அருகில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இது குறித்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி முருகனின் உடலை மீட்டனர்.

    இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×