search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile owner"

    • இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரம் அய்யன்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (51). டெக்ஸ்டைல் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இளங்கோவன் தற்போது ஈரோடு மாமரத்துப் பாளையம் சக்தி நகரில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.

    இளங்கோவனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவரது பழைய நினைவுகளை மறந்து விட்டார். இதற்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று அதிகாலை இளங்கோவன் வீட்டிற்கு அருகே உள்ள டையிங் பட்டறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த இள ங்கோ வனின் குடும்பத்தி னர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு இளங்கோவன் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் வாகன தணிக்கையில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #ParliamentElection
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    நள்ளிரவு 12.10 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் அப்துல்லா (வயது 23) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.91 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ.91 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் முருகையனிடம் ஒப்படைத்தனர். #ParliamentElection

    ×