search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile companies"

    • பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழில் நகரமான திருப்பூரில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்களும், அதனைச் சார்ந்த உப தொழில் நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் பின்னலாடை நிறுவனங்கள், தொழில் வளர்ச்சி அடைய வேண்டி ஆண்டுதோறும் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், நடப்பு ஆண்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நிறுவனங்களில் உள்ள இயந்திரங்களுக்கு வாழை மரம் , பூ மாலை , கலர் காகிதங்கள் அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆயுத பூஜை வழிபாடு நடத்தினர்.இரண்டு நாட்களாகவே எந்திரங்களை ஆயுத பூஜைக்கு தயார் படுத்திய தொழிலாளர்கள், மிஷின்களை சுத்தம் செய்து முறையாக பராமரித்து ஆயுத பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் எந்திரங்களுக்கு நேற்று ஒருநாள் ஓய்வு கொடுத்து உரிய மரியாதை செய்தனர். இந்த நாளில் எந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் புதிதாக இணைக்கப்பட்டு, எந்திரங்களை பராமரிக்கும் தொழிலாளர்களால் தணிக்கை செய்யப்பட்டது.

    அடுத்த ஓராண்டுக்கு அந்த எந்திரம் சிறப்பாக உற்பத்தி பணியில் ஈடுபட தொழிலாளர்கள் இந்த நாளில் வேண்டிக்கொண்டனர். தொழில் நெருக்கடி நீங்கி இந்த வருடம் தொழில் துறைக்கு சிறப்பான வருடமாக அமைய வேண்டும் என சிறு சிறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

    • நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
    • தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, உடுமலை,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது.

    எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×