search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax rebate"

    • வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்
    • நகராட்சி ஆணையர் தகவல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பொது மக்கள் தங்களது சொத்து வரி 2023-2024 முதல் அரையாண்டு சொத்து வரித் தொகையை வருகிற 30 ஆம்தேதிக்குள்ளும் மற்றும் 2023-2024 இரண்டாம் அரையாண்டு சொத்து வரித் தொகையை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதிக்குள்ளும் சொத்து வரி செலுத்தும் வரிவிதிப்புதாரர்களுக்கு, செலுத்தும் வரித் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும் இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

    ரபேல் பேரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகி விட்டது என காங். தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். #RafaleDeal #Reliance #Modi #Congress
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரி தள்ளுபடி வழங்கியதாக பத்திரிகை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    அந்தக் கட்சியின் தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “இந்த பேரத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறினார்.

    மேலும் அவர், “இதே போன்று எத்தனை பிற நிறுவனங்கள் வரி தள்ளுபடி பெற்றன?” என கேள்வி எழுப்பியதுடன், “ காவலாளி திருடனாகி விட்டார் என்பது இதன்மூலம் தெளிவாகி இருக்கிறது. மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டார்.  #RafaleDeal #Reliance #Modi #Congress
    ×