search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarun Mehta"

    • பாரம்பரியம் மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன
    • ஒரு பேட்டரி சுமார் 10 கிலோ எடையுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் தருண்

    ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.100 எனும் அளவில் விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு பேட்டரியை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் (electric vehicle) நல்ல மாற்றாக உருவெடுத்தது.

    ஏத்தர், ஓலா போன்ற புது நிறுவனங்களும், வாகன தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம், ஏத்தர்.

    வளர்ந்து வரும் இத்துறையில் அடுத்த முன்னெடுப்பாக சார்ஜ் குறைந்தவுடன் தங்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை, நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பரிமாற்றி (battery swapping) கொள்ளும் வசதியை ஆங்காங்கே ஏற்படுத்த சில நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. இவ்வசதியை ஒரு சிறப்பு அம்சமாக கூறி வாகன விற்பனையும் நடந்து வருகிறது.

    ஆனால், இந்த முயற்சியை ஏத்தர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) தருண் மேத்தா (Tarun Mehta) விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    ஒரு பேட்டரி என்பது 10 கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். அதனை மாற்றி பொருத்தும் போது கீழே போட்டு விட கூடாது. வயதானவர்களுக்கு இப்பணி எளிதில்லை. அவர்களுக்கு உதவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாற்றலுக்கான பணியகத்தில் 200 பேட்டரிகளாவது எப்போதும் முழு சார்ஜுடன் இருக்க வேண்டும். இதற்கு பெரிய பரப்பளவிலான இடம் தேவைப்படும். இந்த பேட்டரிகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாக்க இரவும் பகலும் பணியில் இருக்கும் பாதுகாப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவையனைத்தும் செலவினங்களை கூட்டி விடும். இதை தவிர, ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்கியவர், சார்ஜிங் நிலையத்தில் உள்ள பழைய பேட்டரியுடன் தனது புது பேட்டரியை பரிமாற்றி கொள்ள தயங்குவார். எனவே நாங்கள் இத்திட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை.

    இவ்வாறு தருண் கூறியுள்ளார்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் விவரங்கள் இணையத்தில் வெளியானது.
    • குறைந்த விலை ஏத்தர் ஸ்கூட்டர் பற்றி அந்நிறுவன சி.இ.ஒ. விளக்கம் அளித்தார்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இது உண்மையாகும் பட்சத்தில் நன்றாகவே இருக்கும் என்ற போதிலும், இதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

    இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போதைக்கு குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இல்லை என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா அறிவித்து இருக்கிறார்.

     

    "ஏத்தர் நிறுவனம் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்க வாய்ப்பு இல்லை. எனக்கு இப்படியான வாகனமும், இதன் நம்பகத்தன்மையே புரியவில்லை," என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தருன் மேத்தா தெரிவித்துள்ளார்.

    சந்தையில் நிலவும் போட்டியை உற்று நோக்குவோம். ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் வேறு எதேனும் மாடல்கள் அறிமுகமாகிறதா என்பதை பார்ப்போம். இந்த விலை பிரிவில், பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான செயல்திறனை வழங்குவது சவாலாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ×