என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Success Club"

    • அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார்.
    • பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சமீப காலமாக திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' ஆகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    அந்த வகையில் நடிகர் விஜய்-திரிஷா நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கில்லி'. இந்த படமானது தமிழக தியேட்டர்களில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகி பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் நேற்று அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னை காசி தியேட்டரில் தீனா படத்தின் ரீ ரிலீஸை பேனர் வைத்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். அஜித் ரசிகர் ஒருவர் அதே தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த கில்லி படத்தின் பேனரை கிழித்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கில்லி பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் எபினேஷ் என்பவரை போலீஸ் கைது செய்தனர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எம்.ஜி.ஆர்.நகர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் தியேட்டரில் பேனரை கிழித்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அதில் எபினேஷ் கூறியிருப்பதாது,

    காசி திரையரங்கில் தீனா படம் பார்ப்பதற்காக சென்றிருந்தேன். உற்சாகத்தில் நண்பர்களுடன் இருந்த உற்சாகத்தின் மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு எனது வண்டி சாவியை கொண்டு கில்லி பேனர் கிழித்துவிட்டேன். அதற்காக நான் அண்ணன் விஜய் அவர்களிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன் என்று கூறி தலைவணங்கி மன்னிப்புக் கொண்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.

    • காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது.
    • போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

    விமானமா? விவசாயமா? -இப்படி ஒரு கேள்வியை கேட்டால் பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை சொல்வது இரண்டும் வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

    ஏனெனில் காலம் மாறினாலும் விவசாயம் அழிந்து விடக்கூடாது. அது நம் உயிர்நாடி. அதே நேரம் பறக்கும் விமானங்கள் நம் வளர்ச்சியின் அடையாளம். எனவே இரண்டும் வேண்டும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.


    பரந்தூரில் அரசு அமைக்க திட்டமிட்டுள்ள விமான நிலையத்துக்காக விளை நிலங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்று அந்த பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் 3 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

    ஆனாலும் இதுவரை எந்த தீர்வையும் எட்டாத நிலையில் அந்த பகுதிக்கு நடிகர் விஜய் நேரில் சென்று பேசி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தன் அரசியலுக்கும் ஆதரவை திரட்டி சென்றுள்ளார்.

    3 ஆண்டுகளாக நடக்கும் போராட்டத்துக்கு விஜய் இப்படி திடீரென்று ஆதரவு கரம் நீட்ட என்ன காரணம்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


    இதற்கு விஜய் சொல்லி இருக்கும் பதில் ஒரு சிறுவனை பற்றியது. அந்த சிறுவன் ராகுல்தான்.

    அவன் தனது மழலை மொழியில் பேசிய பேச்சுதான் தன்னையும் போராட்ட களத்துக்கு இழுத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவன் ராகுலின் பேச்சு யூ டியூப்பில் வெளியிடப்பட்டது.

    அதில், எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலங்களை விட்டால் போதும். இந்த ஏரிகளை விட்டால் போதும். பள்ளிக்கூடங்களை விட்டால் போதும்.

    எங்களுக்கு விமான நிலையம் வந்து நாங்க என்ன மேலயா பறக்க போறோம்? அவுங்க பசங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறாங்க. நாங்க அப்படி ஆக வேண்டாமா?

    விவசாய நிலம் இருந்தா தானே நாங்க சாப்பிட முடியும்? வேறு எதை வச்சு நாங்க சாப்பிட முடியும்? ஏரி இருந்தா நாங்க குளிப்போம். விமான நிலையம் வேண்டாம். ஊரை விட்டால் போதும் எங்க பள்ளியை விட்டால் போதும்.

    இதுதான் சிறுவன் ராகுல் வாயில் இருந்து உதிர்ந்த மழலை பேச்சு. இதுதான் எண்ணையும் இங்கு இழுத்து வந்திருக்கு என்கிறார் விஜய்.

    அரசியல்வாதிகள் கையில் கிடைக்கும் எதையும் அரசியல் ஆக்குவதில் வல்லவர்கள் என்பது தெரிந்ததே.

    அந்த வரிசையில் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அரசியலிலும் தான் முதிர்ந்தவன்தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இதுதான் முதல் முதலாக அவர் பொது வெளியில் வந்து செய்திருக்கும் அரசியல். அதை மிக சாதுரியமாக செய்து இருக்கிறார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

    2026 தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்தி வரும் சதுரங்க விளையாட்டில் விஜய்யும் சமயோசிதமாக தன் காயை நகர்த்தி இருக்கிறார்.

    தான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விவசாய நிலத்தை அழித்து விமான நிலையம் வேண்டாம். வேறு இடத்தில் அமையுங்கள் என்ற முழக்கத்தோடு நீங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழி சாலையை எதிர்க்க வில்லையா? என்ற கேள்வியை எடுத்து வைத்து ஆளும் கட்சிக்கு பதிலடி கொடுத்து தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பரந்தூரில் விமான நிலையம் வருமா? வராதா? மக்கள் போராட்டம் நியாயமானதுதானா? என்ற கேள்விகள் விவாத பொருளாகி இருக்கும் நிலையில் விஜய்யின் இந்த திடீர் வருகையால் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் முதல் முறையாக சென்னையை கடந்து பல இடங்களுக்கும் தெரிய வந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

    • மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.
    • திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தி தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

    தமிழக வெற்றிக்கழகம் பெயரை கழகத் தலைவர் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்க ளுக்கு பாராட்டு சான்று மற்றும் ஊக்கத்தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா என தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது.

    இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக்க ழகத்தின் ஆதரவாளர்களாக சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷம கருத்துகளை திணிக்கும் பணியை செய்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக்கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலைய செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனவே அதிகாரப் பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளை தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×