என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami பாராளுமன்றம்"

      சென்னை:

      அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளரிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      கேள்வி:-பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுகிறதா?

      பதில்:-அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பும் கட்சிகள் எங்களோடு இணைந்து வருகின்றன.

      தே.மு.தி.க.வும் எங்கள் கூட்டணியில் இணைந்துள்ளது. நீங்கள் கேட்பது பற்றி (பா.ம.க.பற்றி) ஏற்கனவே சி.வி.சண்முகம் விளக்கியிருக்கிறார்.

      எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ப்பு நடந்தாலும் வெளிப்படையாக சொல்வோம். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி உருவாக்கி பொதுவான தொகுதி உடன்பாடு ஏற்படுத்தப்படும்.

      கேள்வி:-பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கூறினாலும் அவர்கள் அ.தி.மு.க.வுக்கான கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக கூறி வருகிறார்களே?


      பதில்:-அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை எடுத்தோம். அதை திரும்ப திரும்ப தெளிவு படுத்தி வருகிறோம். ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப அதை கேட்பதால் தி.மு.க. வும், முதலமைச்சரும் கூட அதுபற்றி ஏதேதோ பேசுகிறார்கள்.

      கேள்வி:-திருமாவளவனும் அந்த கருத்தை கூறி உள்ளாரே?

      பதில்:-எங்கள் கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். இது நாங்கள் எடுத்த முடிவு. எனவே அவர் எங்களிடம் சொல்ல வேண்டாம்.

      கேள்வி:-அ.தி.மு.க. தலைவர்கள் முன்னிறுத்தி பிரதமர் மோடி ஆதரவு திரட்டுகிறாரே.

      பதில்:-எங்கள் கட்சியின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செய்த ஆட்சி அப்படி. எனவே அனைவரும் அவர்களை புகழ்கிறார்கள்.

      வருகிற தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று பாராளுமன்றத்தில் தமிழக மக்கள் குரல் எழுப்ப செய்வோம். தற்போதைய தி.மு.க. எம்.பி.க்கள் எதுவும் பேசவில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      ×