என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா வாலிபர் கைது"

    • 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கேரளாவை சேர்ந்த நிகில் சிட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதி யில் மசாஜ் சென்ட ர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதில் சில மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் தொழில் நடை பெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

    அதன் பேரில் போலீசார் சமீப காலகமாக மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதில் சில மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களை போலீசார் மீட்டு வருகின்றனர். மேலும் மசாஜ் தொழில் ஈடுபடும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலை யில் ஈரோடு நெரிக்கல்மே ட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வந்தது.

    இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்து வதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் போலீசார் இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில் அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து விபச்சாரம் நடத்திய கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த திலகன் மகன் நிகில் சிட்டி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கு இருந்த 2 பெண்களை மீட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரான ரங்க நாயகி என்பவரை போலீசார் தேடி வருகி ன்றனர்.

    இதேபோல் நேற்றும் மசாஜ் சென்டரில் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட னர். 6 பெண்கள் மீட்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது


    கேரளாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியது குறித்து வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் ஆலப்புழா நகரில் கடந்த 21-ந் தேதி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியில் பங்கேற்ற வாலிபர் ஒருவர் சிறுவன் ஒருவனை தோளில் சுமந்தபடி சென்றார். அந்த சிறுவன் கோஷம் எழுப்பியபடி சென்றான்.

    அதனை பேரணியில் பங்கேற்றவர்கள் வழிமொழிந்தபடி சென்றனர். இதில் சிறுவன் எழுப்பிய கோஷம் இருபிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலப்புழா போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ( மத அடிப்படையில் குழுக்களிடையே மோதலை ஏற்படுத்துவது),505(1) (பொது அமைதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுதல்) உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும்போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை தோளில் சுமந்த சென்றவர் ஆலப்புழாவை அடுத்த ஈராட்டுபேட்டையை சேர்ந்த அனஸ் என தெரியவந்தது.

    அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் பேரணியை நடத்திய அமைப்பின் ஆலப்புழா பகுதி தலைவர் நவாஸ் என்பவரையும் போலீசார் பிடித்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    ×