என் மலர்
நீங்கள் தேடியது "jo biden"
- 3 நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வரவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
- நாங்கள் மனித உரிமை மீறல் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் எப்போதும் பேசுகிறோம்
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தியாகிகளின் குரல் (Voice of Martyrs) எனும் அமைப்பு, உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை பதிவு செய்து அத்தகைய செயல்கள் நடைபெறும் நாட்டின் அரசாங்கங்களிடம் இவற்றை குறித்து விளக்கங்கள் கேட்க அமெரிக்காவை வலியுறுத்தும்.
சில நாட்களுக்கு முன், இந்த அமைப்பு, தனது அதிகாரபூர்வ இணையதளமான பெர்ஸிக்யூஷன்.காம் (persecution.com) எனும் தளத்தில் "இந்தியாவில், பிற மதங்களை சேர்ந்தவர்களை தங்கள் மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவர்கள் கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள்" என தகவல் வெளியிட்டிருந்தது.
3 நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7 அன்று இந்தியாவிற்கு வருகை புரிந்து புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் (Matthew Miller) ஜோ பைடனின் இந்திய வருகை மற்றும் மத துன்புறுத்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மனித உரிமை மீறல் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பும் பேசியிருக்கிறோம். எதிர்காலத்திலும் பேசுவோம். மத ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா எப்போதும் குரல் கொடுக்க தயங்காது.
கிறித்துவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா உட்பட உலகின் எந்த பகுதியிலும் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுவதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இனியும் அவ்வாறே எதிர்த்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு மேத்யூ தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.
உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
இதன் மூலம் ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதனால் தலைநகர் கிவ், கார்கிவ் ஆகிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.
இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்று ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்புகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோபைடன் கூறும்போது, “உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன். இது போர்க்களத்தில் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்றார்.
அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, “அதிநவீன ஏவுகணை அமைப்புகள் உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றங்களை தடுக்க பயன்படுத்தப்படும்.
அவை ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது. ரஷியாவுக்குள் தாக்க ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்தையடுத்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடிய அதிநவீன பீரங்கி ராக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு அமெரிக்க வழங்குகிறது.
இதில் வெடிமருந்துகள், விமான கண்காணிப்பு ரேடார்கள், கவச எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவை களும் அடங்கும் என்றனர்.
இதையும் படியுங்கள்.. குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது






