என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழா"

    • வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது.
    • மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி காளியம்மன் நகர் பாப்பான் ஏரிக்கரையில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு, மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் முனியப்பன் சுவாமிகள் விருந்துக்கு அழைத்தல் நிகழ்ச்சியும், மறுநாள் காலை சாமி குடியழைத்தல், அரண்மனை கிடா பலியிடுதல் மற்றும் ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    நேற்று பக்தர்கள் கரகம் எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் அங்கபிரசங்கம் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும், சுவாமிக்கு எருமைக்கிடா பலி கொடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புஷ்ப அலங்காரத்தில் மூலவரான வடபத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற தெருக்கூத்து

    நாடகத்தை நுாற்றுக்கணக்கா னோர், இரவு முழுக்க கண்விழித்திருந்து கண்டுகளித்தனர். நிறைவாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி அலங்காரம், வாண

    வேடிக்கை, உற்ச மூர்த்தி

    திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா விற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா அய்யாகவுண்டர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • கோவில் திருவிழாவில் எலக்ட்ரீசியனை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததை அந்த வாலிபர் தட்டிக்கேட்டார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று 12-ம்நாள் திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

    இதில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தமிழ்பாண்டி (வயது22) என்பவரும் கலந்து கொண்டார். அவர் மதுபோதையில் ஆடிக்கொண்டு வந்ததால் ஸ்ரீரங்கபாளையம் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணபவன் தட்டிக்கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்பாண்டி, சரவண பவனை ஆயுதத்தால் அவரது தலையில் தாக்கினார். இந்த சம்பவத்தில் சரவணபவன் படுகாயம டைந்தார். இதனை கண்ட தமிழ்பாண்டி தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி சரவணபவன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து சரவணபவனை தாக்கிய தமிழ்பாண்டியை தேடி வருகிறார்.

    • சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் தரிசனம்.

    நெமிலி:

    ராணிப்பேட்டைமாவட்டம் நெமிலியில் உள்ள விசா லாட்சி அம்மன் சமேத புன்ன கேஷ்வரர் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட விசாலாட்சி அம் மன் சமேத புன்னகேஷ்வரர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர்.

    ×