என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 227410
நீங்கள் தேடியது "போதை"
சிவகாசியில் மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதை கும்பல் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர்
தமிழகத்தில் புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் விற்பனையை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போதை பொருட்களை விற்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தென் மண்ட ல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஆலோசனையின் பேரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா, புகையிலை விற்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பள்ளி மாணவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சிவகாசி பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் அேத பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பள்ளிக்கு சரிவர செல்லாமல் தெரு சந்திப்பில் மயக்கத்துடனேயே சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது, மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த சிலோன் ராஜா, சுருட்டை மாடசாமி, குருசாமி, பூமாரி, ஜெயராம், கருப்பசாமி, சிதம்பரம், சாந்தி ஆகிய 8 பேர், மாணவரை கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக்கியுள்ளனர். மேலும் அந்த மாணவரை பயன்படுத்தி கஞ்சா விற்றதாக சிவகாசி டவுன் போலீசில் மாணவரின் தந்தை புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வளர்ந்து வரும் சிவகாசி மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற சமூக விரோத கும்பல் பள்ளி-கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்று அவர்களை போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன.
எனவே இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X