என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 113068"

    அரசு மானியத்துடன், கண்காட்சிக்கான அரங்க கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    உலகளாவிய நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில், இந்திய ஏற்றுமதியாளரை பங்கேற்க செய்து நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) கைகொடுத்து வருகிறது.

    கடந்த 2020ல் உலகளாவிய நாடுகளிலிருந்து மொத்தம் 68 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை ரகங்களை தென்கொரியா இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 495 கோடி ரூபாயாக, வெறும் 0.73 சதவீத அளவே உள்ளது.

    இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு தென்கொரிய நாடுகளில் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் முறையாக, தென்கொரிய கண்காட்சியில் இந்திய ஏற்றுமதியாளரை பங்கேற்கச் செய்ய ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

    தென்கொரிய தலைநகர் சியோலில் வரும் ஆகஸ்டு 24-ந் துவங்கி 26-ந் தேதி வரை ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க ஏ.இ.பி.சி., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், அதிக எண்ணிக்கையில் இந்த கண்காட்சியில் பங்கேற்க, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. அரசு மானியத்துடன், கண்காட்சிக்கான அரங்க கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரும் 31-ந் தேதிக்குள் பதிவு செய்வோருக்கு, ஏ.இ.பி.சி., சார்பில், அரங்க கட்டணத்தில், 10 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 94422 89222, 99441 81001 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்முவில் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ள துலிப் மலர் தோட்டத்தில் கண்காட்சி தொடங்கியது. #TulipGarden #JammuTulipGarden
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் இந்திரா காந்தி துலிப் தோட்டம் என்ற பெயருடன் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (அல்லிப் பூ) மலர்கள் தோட்டம் அமைந்துள்ளது.

    இதேபோல், ஜம்முவில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தின் சன்சார் ஏரிக்கரையில் ரம்மியமான இயற்கை சூழலில் மேலும் ஒரு மிகப்பெரிய துலிப் தோட்டம் அமைந்துள்ளது.

    இந்த தோட்டத்தில் சிவப்பு, மஞ்சள் போன்றபல வண்ணங்களில் துலிப் மலர்கள் உள்ளன. இந்த தோட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வண்ணமயமான கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.

    அவ்வகையில், இந்த ஆண்டின் கண்காட்சியை ஜம்மு சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் நேற்று திறந்து வைத்தனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதுவித நிறக்கலப்பு கொண்ட மலர் வகைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.



    15 நாட்களிலிருந்து 30 நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாரசீக நாட்டில் இருந்து துலிப் மலர்கள் ஐரோப்பா கண்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பல பகுதிகளில் மரபணு மாற்றம் செய்து துலிப் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

    உலகின் மிகப்பெரிய துலிப் தோட்டம் நெதர்லாந்து நாட்டின் ஹாலந்து நகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #TulipGarden #JammuTulipGarden 
    சென்னைப் புத்தகக் கண்காட்சியினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கின்றார். #EdappadiPalaniswami

    சென்னை:

    தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமான பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாசலம் சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சி பற்றி கூறியதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 4-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. இப்புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

    வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் கண்காட்சி நடை பெறும்.

    சென்னைப் புத்தகக் கண்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 17 நாட்கள் நடைபெறுகிறது. (இதற்கு முன்பு வரை 13 அல்லது 14 நாட்கள் மட்டுமே புத்தகக் காட்சி நடைபெற்றது) இந்தப் பதினேழு நாட்களில் 10 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பது கூடுதல் சிறப்பு.

    இந்த மாபெரும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி 4-ந்தேதி மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கின்றார்.

    முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு நல்லி குப்புசாமி செட்டி தலைமை ஏற்கிறார்.

    820 அரங்குகளுடன் 428 பங்கேற்பாளர்களுடன் சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. இதில், சுற்றுச்சூழலுக்கெனத் தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு வாசகர்களைக் கவரும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழன்னை உருவச்சிலை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நிறுவப்படுகிறது. இந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் 5-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்குத் திறந்து வைக்கிறார்.

    தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன் வாழ்த்துரை வழங்குகிறார். தமிழன்னை திருவுருவத்தைப் பிரபலப் படுத்தி வரும் பேராசிரியர் ஆறு.அழகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

    பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடத்தப்பட உள்ளன.

    வாசகர்கள்- எழுத்தாளர்கள் சந்திப்புக்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் வாசகர்களுடன் முன்னணி எழுத்தாளர்கள் உரையாட இருக்கிறார்கள். பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் 16-ந்தேதி நம்முடைய பண்பாட்டைப் பறை சாற்றும் வகையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந்தேதி அன்று கமல் ஹாசன் பங்கேற்று ‘‘வாசித் தேன் யோசித்தேன்’’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது முல்லை பதிப்பகம் முல்லை பழநியப்பனுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாண்டு முதல்முறையாகச் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்ச வேணி பெரியண்ணன் பெயராலான அவ்விருது திலகவதி ஐ.பி.எஸ்.க்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    புத்தக கண்காட்சி வளாகத்தில் இரண்டு ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    புத்தகக் கண்காட்சியில் நூல்களுக்கு 10 சதவீதம் கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #EdappadiPalaniswami

    காரைக்குடி அருகே காலத்தால் அழியாத மற்றும் 400 ஆண்டு கால வரலாற்று புகைப்படங்களை நகரத்தார் மாளிகை முழுவதும் வைத்து கண்காட்சி கூடமாக முதியவர் ஒருவர் மாற்றியுள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது கானாடுகாத்தான். இங்குள்ள து.க.தெருவில் வசித்து வருபவர் குப்பன் செட்டியார்(வயது 65). இவர் காரைக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தனது சேகரிப்பின் மூலம் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷ களஞ்சியத்தை தனது வீட்டில் சேகரித்து வருகிறார். எளிதில் கிடைக்கப்பெறாத 400 ஆண்டு கால பழமைவாய்ந்த புகைப்படங்கள், ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதுதவிர இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களின் ஆங்கிலத்தை தமிழர்கள் கற்க பயன்படுத்திய முதல் புத்தகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய டைரி, சுதந்திரம் கிடைத்தபோது அவற்றை கொண்டாடிய விதம், ஒருவருக்கொருவர் அனுப்பிய வாழ்த்து அஞ்சல் அட்டை, கலை, இலக்கியம், புராணம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இவரது சேகரிப்பில் அடங்கியுள்ளள. மேலும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் தொழில் செய்தபோது அவர்கள் எழுதிய 100 ஆண்டுகள் பழமையான வரவு-செலவு புத்தகம், முதன்முதலில் வெளியான தமிழ், ஆங்கிலம் அகராதி தொகுப்புகள், இதழ்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

    இதுகுறித்து குப்பன் செட்டியார் கூறியதாவது:- கானாடுகாத்தான் பகுதியில் உள்ள இந்த நகரத்தார் வீட்டை வாடகைக்கு எடுத்து இதில் கடந்த 40 ஆண்டுகாலமாக அரிய வகை பொக்கிஷங்களை சேகரித்து வருகிறேன். மழைநீர் சேகரிப்பு முற்றம் தோற்றம் உள்ள இந்த பிரமாண்ட வீட்டின் உள்பகுதியில் 2 பெரிய அரங்கு மற்றும் ஒரு பெரிய அரங்கு முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வரிசைப்படுத்தி கண்காட்சிக்காக வைத்துள்ளேன். இதில் முக்கியமாக கடந்த 1884-ம் ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திய தபால் தலைகள், லண்டன் ராணி பயன்படுத்திய தபால் தலைகள், பண்டைய இயல், இசை, நாடகம் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம், 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருவிளையாடல் புராணம், 120 வருடத்திற்கு முன்பு நமது தமிழர்கள் பயன்படுத்திய பனை ஓலையால் ஆன அரிச்சுவடிகள், பண்டைய காலத்தில் தமிழர்களின் திருமணம் குறித்த தகவல்கள் உள்ளன. இதுதவிர கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் புகைப்படம் எடுத்த நெல்லை நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவாரூர் தேரோட்டம், குற்றாலம் அருவிகள், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், மெரினா பீச், மவுண்ட் ரோடு, ஐகோர்ட்டு கட்டிடம் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களும் உள்ளன.

    மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிறிஸ்த ஆலயங்களின் புகைப்படங்கள், உலக அளவில் காணப்பட்ட பறவைகள் குறித்த படங்கள், கடந்த 1800-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த டைரிகள், புகைப்படங்கள், இந்திய ராணுவத்திற்கு அப்போதே சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக அளவில் பண உதவி செய்த தமிழர்கள் குறித்த தகவல்கள், தமிழர்கள் வெளிநாட்டில் செய்த வாணிபம், இன்று அழைக்கப்படும் வியட்நாம் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும் கடந்த 1900-ம் ஆண்டு முதல் 1923-ம் ஆண்டு வரை காரைக்குடியில் தயாரிக்கப்பட்ட அப்போதைய சொகுசு கார்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×