search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sugamunivar"

    • படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
    • சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்.

    முன்பொரு சமயம் பிரம்மதேவன், தன் படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக்கேட்டு கொண்டிருந்த சுகமுனிவர், அதை அப்படியே சரஸ்வதியிடம் சென்று கூறினார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், சுக முனிவரை நோக்கி, "சொன்னதை திரும்பச் சொல்லும் கிளியின் தன்மை கொண்ட நீ, கிளியாக மாறுவாய்" என சாபமிட்டார். உடனே சுகமுனிவர்,

    பிரம்மனின் தாள் பணிந்து சாபம் நீங்க வழிகேட்டார். அதற்கு பிரம்மா, "வனப்பகுதியில் (இப்போதைய கோவில் பகுதி) சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்" என்று விமோசனத்துக்கு வழி கூறினார்.

    இதையடுத்து எண்ணற்ற கிளிகளுடன், ராஜா கிளியாக மாறிய சுகமுனிவர், தினமும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார்.

    அப்போது வேடனான வச்சிரகாந்தன் என்பவன் கவண் கல்லால் கிளிகளை விரட்டி வர, அவை அங்கிருந்த புற்றின் உள்ளே பதுங்கியது. இதனால் வேடன் ஆத்திரத்தில் மண்வெட்டியால் புற்றை வெட்டினான். இதில் கிளிகள் எல்லாம் மாண்டு போனது. ஆனால் ராஜா கிளி (சுகமுனிவர்) மட்டும் புற்றுக்குள் இருந்த சுயம்பு மூர்த்தியை காக்கும் பொருட்டு தன் இறக்கைகளை குடையாய் விரித்து மறைத்து நின்றது.

    உடனே வேடன் கிளியை வெட்ட, ரத்தம் பீறிட்டு ராஜா கிளி மாண்டுபோனது. அதேநேரத்தில் சுயம்பு மூர்த்தியின் தலையிலும் வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட வேடன் வெடவெடத்து போனான்.

    தான் வெட்டியது இறைவனைத்தான் என உணர்ந்த வேடன், தன்னைத்தானே வாளால் வெட்டி உயிரை மாய்த்து கயிலாயத்தை அடைந்தான். கிளி கூட்டமும் இறைவன் திருவடியை அடைந்தன.

    சிவனருளால் கிளி உருவம் நீங்கப்பெற்ற சுகமுனிவர் இறைவனை நோக்கி, "பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இந்த திருத்தலத்தில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக தலவரலாறு கூறுகிறது.

    ×