search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student marriage"

    • மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.
    • அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சோழவரம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி அருகில் உள்ள கடைக்கு சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதுகுறித்து போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விசாரணையில் மாணவியை அலமாதி வன்னியன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று இருப்பது தெரிந்தது.

    மாணவியை போலீசார் மீட்டனர். இதுகுறித்து அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரு‌ஷநாடு சிங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (26) என்பவர் காதலிப்பதாக கூறி ஆசையாக பழகி வந்துள்ளார்.

    பாண்டீஸ்வரன் புனேயில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமலேயே அவரை கடத்திச் சென்று கடமலைக் குண்டுவில் திருமணம் செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கணேசன் அதிர்ச்சியடைந்தார். வரு‌ஷநாடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த ராணுவ வீரர் பாண்டீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ×