search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "store sealed"

    • புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தோஷ், ஹரி மற்றும் அலுவலர்கள் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது மேலராஜ வீதியில் சண்முகம் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

    அதைதொடர்ந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    இதையடுத்து நீடாமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரிகள் எச்சரித்தனர் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது
    • தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பழைய உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குன்னூர் ஆர்டிஓ பூசனக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற முறையில் கிடந்தது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் பயன்படுத்த வந்ததும் தெரியப்பட்டது. இதனை அடுத்து அந்த கடைக்கு ஆர்டிஓ சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் கடையை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

    • போதை பாக்கு விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்குகள் விற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தாசில்தார் நடத்திய திடீர் ஆய்வில் போதை பாக்கு– கள் விற்ற கடைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தார்.  விக்கிரவாண்டி தாலுகா சிந்தாமணியின் சர்வீஸ் சாலையில் உள்ள முருகன் (வயது 47) என்பவரது கடை யில் தாசில்தார் இளவரசன் தலைமையில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப்-–இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.ஏ.ஓ. சண்முகவேலன், உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவி னர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்கு–கள் விற்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைதுசெய்தனர். போதை பாக்குகளை பறிமுதல் செய்து, தாசில்தார் இளவர சன் கடையை பூட்டி சீல்வைத்தார். 

    ×