கோத்தகிரியில் டாஸ்மாக் கடைக்கு சீல்

கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார்.
கோத்தகிரியில் டாஸ்மாக் கடைக்கு சீல்
Published on

கோத்தகிரி

கோத்தகிரி பழைய உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குன்னூர் ஆர்டிஓ பூசனக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற முறையில் கிடந்தது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் பயன்படுத்த வந்ததும் தெரியப்பட்டது. இதனை அடுத்து அந்த கடைக்கு ஆர்டிஓ சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் கடையை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com