என் மலர்
நீங்கள் தேடியது "srilanka bomb blast"
சென்னை:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம போன் ஒன்று வந்தது.
போனில் பேசிய நபர் இலங்கையை போன்று கோவையிலும் குண்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
இதுபற்றி சென்னை போலீசார், உடனடியாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவை போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர். போனில் பேசிய நபர் பொள்ளாச்சி பகுதியில் 2 பேர் குண்டு வைக்கப் போவதாக பேசிக் கொண்டு இருந்தனர் என்றும், இதனை கேட்டுத்தான் உங்களுக்கு தகவல் கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் பொள்ளாச்சியில் இருந்து பேசியதை போலீசார் உறுதி செய்தனர்.

போனில் பேசியநபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால் அவர் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்கபட வில்லை. அவரை பிடிக்க போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.
வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணி முதல் ரெயில் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.
அதிகாலை 4 மணி வரை 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை.
சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசியவர் குடிபோதையில் உளறினாரா என விசாரித்து வருகிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் பதிவான எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். #srilankablasts
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வாரம் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. முதல் போட்டி மே 3-ம் தேதி தொடங்கவிருந்தது. இதற்காக கடந்த 5 நாட்களாக கராச்சி முகாமில் தீவிர பயிற்சி பெற்ற பாகிஸ்தான் அணி, வரும் 30-ம் தேதி இலங்கைக்கு புறப்படுவதாக இருந்தது.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில், போட்டியை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், இந்த போட்டித் தொடர்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
19 வயதுக்குட்பட்டோருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்து ஜூன்- ஜூலை மாதங்களில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. #SrilankaAttacks #PakistanU19Tour #SLC
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaAttacks #SriLankaBlast
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசாரின், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடலோர பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்ட 53 மீனவ கிராமங்களில் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில், 19 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி கடற்கரை சாலை, பேராலயத்தின் 4 புறங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே பேராலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






