search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Tournament"

    • அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக 18-வது மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

    2-வது இடத்தை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், 3-வது இடத்தை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் தேவராஜூ ஆகியோரை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • 6 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கேப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பூப்பந்து, பளுதூக்குதல் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையா ட்டரங்கத்தில் நாளை(27-ந்தேதி) தொடங்குகிறது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி விளை யாட்டு வீரர்-வீராங்க னைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும்.

    பள்ளிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், கல்லூரி களுக்கான போட்டிகள் மார்ச் 1,2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். பள்ளிகளுக்கான பளு தூக்குதல் போட்டிகள் மார்ச் 11-ந்தேதியும், கல்லூரிகளுக்கான போட்டிகள் மார்ச் 12-ந்தேதியும் நடைபெறும்.பள்ளிகளுக்கான கடற்கரை கையுந்துபந்து போட்டி நாளை மறுநாள்(28-ந்தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், கல்லூரி களுக்கான போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடைபெறும்.

    போட்டியில் பங்கேற் பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.3ஆயிரமும், 2-ம், 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பள்ளிகளிலிருந்து பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானம் மற்றும் சத்திரிய பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஜனவரி 6-ந் தேதி தொடங்கி, ஜனவரி 29-ந் தேதி வரை 17 ஆயிரத்து 362 விளையாட்டு வீரர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகளை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்திலும், அதைதொடர்ந்து சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மாணவி களுக்கான கையுந்து பந்து போட்டியையும் கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    விளையாட்டின் முக்கியத்துவம், விளையாடுவதனால் என்ன பயன்? என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து, விளையாட்டின் மூலம் நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ள முடியும். இதில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை.

    இதில் பங்கேற்பதே முதல் வெற்றி என்றும், இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை கலெக்டர் தெரிவித்தார்.

    கபடி போட்டிகளில் 42 பள்ளி மாணவர் அணிகளும், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டிகளில் 12 அணிகளும் பங்கேற்றன. பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவி கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்தி றனாளிகள் பங்கேற்கும் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெறுவார்கள்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளை யாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள www.sdat.tn.gov.in முகவரியில் குழு மற்றும் தனி நபர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பொதுப்பிரிவு 15-35 வயது ஆண்கள், பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து போட்டிகள் நடைபெறும்.

    பள்ளி மாணவ, மாணவிகள் 12-19 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12-19 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17-25 வயது டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடைபெறும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பேட் மின்டன், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கைப்பந்து போட்டி நடைபெறும். மனவளர்ச்சி குன்றி யோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டி நடைபெறும்.

    அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண், பெண்களுக்கு கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் நடைபெறும். மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.1000 வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×