search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்
    X

    முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்

    • 6 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
    • இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கேப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பூப்பந்து, பளுதூக்குதல் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையா ட்டரங்கத்தில் நாளை(27-ந்தேதி) தொடங்குகிறது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி விளை யாட்டு வீரர்-வீராங்க னைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும்.

    பள்ளிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், கல்லூரி களுக்கான போட்டிகள் மார்ச் 1,2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். பள்ளிகளுக்கான பளு தூக்குதல் போட்டிகள் மார்ச் 11-ந்தேதியும், கல்லூரிகளுக்கான போட்டிகள் மார்ச் 12-ந்தேதியும் நடைபெறும்.பள்ளிகளுக்கான கடற்கரை கையுந்துபந்து போட்டி நாளை மறுநாள்(28-ந்தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், கல்லூரி களுக்கான போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடைபெறும்.

    போட்டியில் பங்கேற் பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.3ஆயிரமும், 2-ம், 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பள்ளிகளிலிருந்து பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×