என் மலர்
நீங்கள் தேடியது "Solar system"
- கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி எனப் பெயரிடப்பட்டுள்ள கிரகத்தில், பூமியில் வாழும் நுண்ணுயிர்களால் உருவாக்கப்படும் இரண்டு வாயுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே12-18பி கிரகம் நமது பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது மற்றும் பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் இக்கிரகம் உள்ளது.
- சுக்கிரன், சந்திரனுக்கு அருகில் காணப்பட்ட அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது.
- உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்குபவர்களை மகிழ்வித்தது.
வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் பிரகாசமான கிரகமான வெள்ளி கிரகம், சந்திரனுக்கு அருகில் மின்னிய அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது. மிகவும் அரிய வான நிகழ்வுகளில் ஒன்றான இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்கு பவர்களை மகிழ்வித்தது.
சந்திரனின் இருண்ட விளிம்புக்கு பின்னால் வெள்ளி மெதுவாக மறைந்ததால் இரண்டும் ஒரே பார்வையில் தோன்றின. ஒன்றாக இணைந்தன. இந்த காட்சி டுவிட்டரில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பயனாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி இரவு சந்திரன் உள்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த 5 கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல் ஆர்ச் போல காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வருகிற 28-ந்தேதி சூரியன் மறைவுக்கு பிறகு நீங்கள் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். வியாழன் புதனை விட பிரகாசமாக காணப்படும். அதே சமயம் வீனஸ் அனைத்து கிரகங்களையும் விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது வியாழன் மற்றும் புதனின் மேல் இடது புறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எல்லா வற்றிலும் மிகவும் திகைப்பூட்டும் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
- அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.
மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது. விண்ணில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பூமியில் இருந்து பார்ப்பது அலாதியான அனுபவத்தை தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
ஜூலை 5 - நிலவு இல்லாத நாள் [No Moon Day]
இந்த நாளில் வானில் நிலவு தோன்றாமல் தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்களாக அதிகமாக பிரகாசித்து காண்போரை வசீகரிக்கும்.
ஜூலை 6 - அப்ஹெலியன் [Aphelion]
இந்த நாளில் பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதையே அப்ஹெலியன் நிகழ்வு என்கின்றனர்.

ஜூலை 12 - மெர்குரி எலாங்கேஷன் [Mercury Elongation]
மெர்குரி என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சிறிய கோள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மிகவும் உட்புறமாக உள்ள கிரகமாக உள்ளது. இதனால் பொதுவாகவ்வே பூமியிலிருந்து மெர்குரி கிரகம் நமக்கு புலனாவதில்லை. ஆனால் இந்த நாளில் மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.

ஜூலை 21 - பக் நிலா [Buck Moon]
இந்த நாளில் வானையே ஜொலிக்க செய்யும் அளவுக்கு முழு நிலவு தோன்றும். அதிக இடி இடிக்கும் மாதமாக ஜூலை இருப்பதால் இந்த நாளில் தோன்றும் நிலவுக்கு Thunder Moon என்றும் பெயர் உண்டு. மேலும் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் இதற்கு ஹே நிலவு என்றும் பெயர் உண்டு. அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

ஜூலை 28& 29 - ஏரிகல் பொழிவு [ Delta Aquarids Meteor Shower]
ஜுலை 28 அன்று இரவும், ஜுலை 29 அன்று காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழியும் நிகழ்வை விண்ணில் நம்மால் காண முடியும். இந்த எரிகல் பொழிவு ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் மத்தி வரையில் தொடர்ந்து நடக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28& 29] உச்சபட்சமாக பொழிவு இருக்கும்.

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.

எனவே உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது. இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது. எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துளார்.
‘டி.இ.எஸ்.எஸ்.’ விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. #NASA #TESS #planets






