search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solai malai murugan temple"

    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான நாளை காலை யாகசாலை பூஜையு டன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் சிறப்பு அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 13-ந் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம் ஹாரமும், மறுநாள் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல் யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நாளை கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடை பெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.

    13-ந் தேதி சூரசம்ஹார நாளில் கந்த வேள்வியும், அன்று மாலை பூச்சப்பரத் தில் வீதி உலாவும் நடக்கிறது.

    14-ந் தேதி காலையில் சுவாமி தங்க கவசத்துடன் பாவாடை தரிசனத்தில் அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலையில் லட்சார்ச் சனை நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.
    சோலைமலை முருகன் கோவிலுக்கு 108 மயில் காவடிகளுடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருமுருகன் வாரவழிபாடு சபையின் சார்பாக 108 முருகபக்தர்கள் மயில்காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்டு கொன்னையூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிபட்டி வழியாக உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவி லுக்கு பாதயாத்திரையாக வந்து சேர்ந்தனர். அங்கு கோவிலின் 4 பிரகாரங்களிலும் மேள தாளம் முழங்க பக்தர்கள் காவடியுடன் ஆடிப்பாடி மூலவர் சன்னதியை அடைந்து சாமிதரிசனம் செய்தனர்.

    சாமிக்கு திருஆபரணங்கள் சாத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், தேன், புஷ்பம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சர்வ அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பின்னர் தங்கத்தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாடு சபையின் தலைவர் பொன்.முத்துவிநாயகம், பொருளாளர் டி.ஏ.சேகரன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த முருக பக்தர்களை தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் வரவேற்றனர்.

    ×