search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்
    X

    சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான நாளை காலை யாகசாலை பூஜையு டன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் சிறப்பு அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 13-ந் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம் ஹாரமும், மறுநாள் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல் யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நாளை கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடை பெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.

    13-ந் தேதி சூரசம்ஹார நாளில் கந்த வேள்வியும், அன்று மாலை பூச்சப்பரத் தில் வீதி உலாவும் நடக்கிறது.

    14-ந் தேதி காலையில் சுவாமி தங்க கவசத்துடன் பாவாடை தரிசனத்தில் அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலையில் லட்சார்ச் சனை நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.
    Next Story
    ×