என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்
By
மாலை மலர்7 Nov 2018 6:51 AM GMT (Updated: 7 Nov 2018 6:51 AM GMT)

மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
மதுரை அழகர்மலையில் முருகனின் 6-வது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான நாளை காலை யாகசாலை பூஜையு டன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் சிறப்பு அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.
வருகிற 13-ந் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம் ஹாரமும், மறுநாள் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல் யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நாளை கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடை பெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.
13-ந் தேதி சூரசம்ஹார நாளில் கந்த வேள்வியும், அன்று மாலை பூச்சப்பரத் தில் வீதி உலாவும் நடக்கிறது.
14-ந் தேதி காலையில் சுவாமி தங்க கவசத்துடன் பாவாடை தரிசனத்தில் அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலையில் லட்சார்ச் சனை நடக்கிறது.
முன்னதாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நாளை (8-ந்தேதி) தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான நாளை காலை யாகசாலை பூஜையு டன் தொடங்குகிறது. காலை 10 மணிக்கு சாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்-தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். மாலையில் சிறப்பு அலங்காரங்களில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.
வருகிற 13-ந் தேதி மாலை 5.40 மணிக்கு சூரசம் ஹாரமும், மறுநாள் (14-ந் தேதி) காலை 10 மணிக்கு மேல் முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல் யாணமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் நாளை கணபதி ஹோமத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 14-ந் தேதி வரை நடை பெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறும்.
13-ந் தேதி சூரசம்ஹார நாளில் கந்த வேள்வியும், அன்று மாலை பூச்சப்பரத் தில் வீதி உலாவும் நடக்கிறது.
14-ந் தேதி காலையில் சுவாமி தங்க கவசத்துடன் பாவாடை தரிசனத்தில் அருள்பாலிக்கிறார். 15-ந் தேதி காலையில் லட்சார்ச் சனை நடக்கிறது.
முன்னதாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
