என் மலர்
நீங்கள் தேடியது "நக்கீரன் கோபால்"
- அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
- ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் உள்ள ஈஷா மையம் மற்றும் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து நக்கீரன் இதழ் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூறி அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, இன்று ஓம்கர் பாலாஜி நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஓம்கார் பாலாஜி 'நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு' மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி' என்ற வார்த்தை இல்லாமல் 'தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக' தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக சென்னை வந்திருந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு செல்லப்பட்டுள்ளார்.
- அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
- ஓம்கார் பாலாஜியை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் கைதான அர்ஜுன் சம்பத்தின் மகனும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு
கோவையில் உள்ள ஈஷா மையம் மற்றும் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து நக்கீரன் இதழ் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூறி அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக சென்னை வந்திருந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நவம்பர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை 3ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- மிகச் சிறந்த பத்திரிகையாளரான நக்கீரன் கோபாலுக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
- நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் கலைஞர் எழுதுகோல் விருது பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தொலைக்காட்சி நெறியாளர் சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கதாகும். விருது பெற்ற அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.
பத்திரிகை துறையில் புலனாய்வு செய்து செய்திகளை சேகரித்து துணிச்சலுடன் வெளியிடுவதில் சாதனைகளை புரிந்தவர் நக்கீரன் கோபால்.
பெயருக்கு ஏற்றாற்போல் யார் குற்றம் செய்தாலும் அதை கண்டிக்கின்ற வகையில் செய்திகளை வெளியிடுவதில் தனித்தன்மையுடன் செயல்படுபவர்.
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் அவர்களை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற போது, அவரை மீட்பதற்காக அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், நக்கீரன் கோபால் அவர்களை காட்டிற்குள் அனுப்பித் தான் மீட்டார் என்பதை எவரும் மறக்க இயலாது.
அன்றைக்கு மிகுந்த துணிச்சலோடு காட்டிற்குள் சென்று வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, நடிகர் ராஜ்குமாரை மீட்டததனால் தமிழக - கர்நாடக மக்களிடையே நிலவிய பதற்றத்தை தவிர்த்து நல்லிணக்கம் ஏற்பட தனது உயிரை பணயம் வைத்து செயல்பட்டவர் நக்கீரன் கோபால்.
மிகச் சிறந்த பத்திரிகையாளரான அவருக்கு பொருத்தமாக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, தொலைக்காட்சி ஊடக நெறியாளராக செயல்பட்டு, விவாதங்களில் கருத்து மோதல்களை அனைவரையும் கவருகிற வகையில் நடத்துவதன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்றவர்.
நெறியாளர்களுக்கு அன்றாட அரசியல் புரிதலும், அரசியல் பின்னணியும் இருந்தால் தான் விவாதங்களை சுவைபட நடத்த முடியும். அந்த வகையில் சுகிதா சாரங்கராஜ் அவர்கள் நமது பாராட்டுக்குரியவராவார்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கும், சுகிதா சாரங்கராஜ் அவர்களுக்கும் கலைஞர் எழுதுகோல் விருது மூலம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.